துவரங்குறிச்சி 14வது வார்டில் சாலை சீரமைக்க கோரிக்கை
துவரங்குறிச்சி, நவ.29: துவரங்குறிச்சி பகுதியில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு அண்ணா நகர் பகுதியில் தற்போது 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் முறையான சாலைகள் இல்லாததால் மண் சாலையிலேயே இப்பகுதி மக்கள் நடந்து சென்று வருகின்றனர். மழை...
முதியவர் மாயம்
திருச்சி, நவ.29: திருச்சியில் மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சுப்பிரமணியம்(49). தனியார் நிறுவன ஊழியர், கடந்த நவ. 5ம்தேதி மனைவி கலாமேரியிடம்(40) வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள், வீடுகள் என எங்கு தேடி பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து...
குட்கா விற்றவர் கைது
திருச்சி, நவ.29: திருச்சி, கே.கே. நகர் இந்தியன் வங்கி காலனி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடப்பதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புதுறை அலுவலர்களுக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் கே.கே.நகர் போலீசார் உதவியுடன் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குட்கா விற்ற கே.கே.நகர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த ராமச்சந்திரன்(45), என்பவரை கைது...
திருச்சி மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக ஷியாமளா தேவி நியமனம்
திருச்சி, நவ. 28: திருச்சி தலைமையிடத்து துணை மாநகர கமிஷனராக ஷியாமளா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட சிவில் சப்ளை உளவுத்துறை எஸ்பியாக இருந்த ஷியாமளா தேவி, திருச்சி மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திருச்சி மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக இருந்த...
வையம்பட்டி அருகே கார் கவிழ்ந்து 3 பேர் காயம்
மணப்பாறை, நவ. 28: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே சுற்றுலா சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சரத்பாபு(23). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் விராலிமலையில் இருந்து கேரளா மாநிலம்...
சோஷியல் மீடியாவிற்கு மாணவிகள் அடிமையாக கூடாது ‘காவலன்’ செயலி பெண்களுக்கு எப்போதும் துணை நிற்கும்
திருவெறும்பூர், நவ. 28: திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவலன் உதவி செயலியை குறித்த விழிப்புணர்வு துவாக்குடி போலீசார் சார்பில் ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பெண்கள் என பலருக்கு நாள்தோறும் தொந்தரவுகளும், பிரச்சனைகளும் ஏற்பட்டு கொண்டு வருகிறது. இதனிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவலன் செயலி...
ரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி மேலாண்மை அமைப்பு மையம்
திருச்சி, நவ.27: ரங்கம் ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி மேலாண்மை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் பல்வேறு ரயில்வே நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்பு பாதை காவல் நிலையங்கள் அமைந்துள்ளது. அங்கு பயணிகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க இணைய வழி புகார் அளிப்பு மையத்தை ரயில்வே...
திருவெறும்பூர் அருகே குட்கா விற்றவர் கைது
திருவெறும்பூர், நவ.27: திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே பழங்கனாங்குடியில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மளிகை கடையை சோதனை செய்த போலீசார்,...
சமயபுரம் கோயில் நுழைவு வாயில் கட்டும் பணி விறுவிறுப்பு
சமயபுரம், நவ.27: திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்...