ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட பிஓஎஸ் கருவிக்கான இணையதள வேகத்தை அதிகரிக்க கோரிக்கை

தூத்துக்குடி, செப்.12: எம்பவர் இந்தியா நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் செயலாளர் சங்கர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 37,328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் பிஓஎஸ் எனும் மின்னணு கருவி மூலம் பொருள்கள் விநியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது....

வல்லநாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு

By Karthik Yash
11 Sep 2025

செய்துங்கநல்லூர்,செப். 12: வல்லநாட்டில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற சண்முகையா எம்எல்ஏ, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். கருங்குளம் யூனியன், வட வல்லநாடு, கலியாவூர் ஊராட்சி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வல்லநாட்டில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சண்முகையா எம்.எல்.ஏ., முகாமை துவக்கிவைத்து பொதுமக்களிடம் இருந்து...

பணிபுரியும் இடத்திலேயே உப்பள தொழிலாளர்களுக்கு மருத்துவமுகாம்

By Karthik Yash
10 Sep 2025

தூத்துக்குடி,செப்.11: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்படி, மாவட்ட சுகாதார நலத்துறை சார்பில் நடமாடும் மருத்துவக்குழுவினர் டாக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே ரத்த பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, கண்கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் 16ம் தேதி கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த...

சாத்தான்குளத்தில் தவெக ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
10 Sep 2025

சாத்தான்குளம்,செப்.11: தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது பொய் வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி தவெகவினர் நேற்று சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கட்சி பணிக்காக சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது திருச்சி போலீசார் பதிவு செய்த வழக்கை உடனடியாக வாபஸ் பெறக்கோரி தூத்துக்குடி மேற்கு...

தஸ்நேவிஸ் மாதா பெண்கள் பள்ளி கபடி போட்டியில் அபார சாதனை

By Karthik Yash
10 Sep 2025

தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் 17வயதுக்கு உட்பட்ட பிரிவில் முதல் இடத்தை பெற்று பரிசு கோப்பையும் சான்றிதழும் பெற்றனர். மேலும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம்...

கோவில்பட்டியில் பராமரிப்பின்றி சேதமான மின்கம்பம் மாற்றியமைப்பு பொதுமக்கள் பாராட்டு

By Karthik Yash
09 Sep 2025

கோவில்பட்டி, செப். 10: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் முன்புறம் சேதமடைந்த மின்கம்பத்தை ஊழியர்கள் அகற்றி புதிய மின்கம்பம் அமைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நன்றி கலந்த பாராட்டுத் தெரிவித்தனர். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் முன்புறம் அமைக்கப்பட்ட மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதையடுத்து இதை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் நகரச்...

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எஸ்பி ஆல்பர்ட்ஜான் அறிவுரை

By Karthik Yash
09 Sep 2025

தூத்துக்குடி, செப். 10: காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எஸ்பி ஆல்பர்ட்ஜான் போலீசாருக்கு அறிவுரை கூறினார். தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் குளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும்...

பைக் மீது லோடுவேன் மோதி தொழிலாளி சாவு

By Karthik Yash
09 Sep 2025

கோவில்பட்டி, செப். 10: கோவில்பட்டி வஉசி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (47). இவர், வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் இளையரசனேந்தல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மரக்கடையில் லோடு ஏற்றுவதற்காக அவ்வழியாக வந்த லோடு வேன், கணேசன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் படுகாயமடைந்தார்....

முள்ளூரில் புதிய ரேஷன் கடை

By Karthik Yash
08 Sep 2025

குளத்தூர், செப்.9: முள்ளூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முள்ளூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை...

கோவில்பட்டியில் ரேஷனில் பொருட்கள் வாங்க காத்திருந்த தொழிலாளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

By Karthik Yash
08 Sep 2025

கோவில்பட்டி, செப். 9: ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் எடை குறையாமல் வழங்க கடந்த சில மாதங்களாக புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடையில் எடைபோடும் எலக்ட்ரானிக் தராசை, பிஓஎஸ் மெஷினுடன் ‘புளூடூத்’ மூலம் இணைத்து, பில் போடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி செய்வதால் ஒரு கிராம் எடை...