ஆத்தூர் சேனையர், புதுநகர் வீதிகளில்பேவர்பிளாக் சாலை அமைக்க முடிவு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ஆறுமுகநேரி, அக். 31: ஆவரையூரில் சேதமடைந்த நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றுவது; சேனையர் தெரு, புதுநகர் முதல் குறுக்குத்தெரு உள்ளிட்ட வீதிகளில் புதிதாக பேவர்பிளாக் சாலை அமைப்பது என பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் கமால்தீன் தலைமையில் நடந்தது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, துணைத்தலைவர்...
விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராம மக்களின் அடிப்படை தேவைகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேட்டறிந்தார்
விளாத்திகுளம், அக்.30: விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராம மக்களின் அடிப்படை தேவைகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வரத்து பாதை சீரமைத்தல், புதிய பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை திமுக தலைமை செயற்குழு...
உடன்குடி சந்தையடி தெரு சந்திப்பில் வாகன நெருக்கடி
உடன்குடி, அக்.30: உடன்குடி வடக்கு பஜார் பகுதியிலுள்ள சந்தையடி தெரு சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாகும். நெல்லை, நாசரேத், சாத்தான்குளம், திசையன்விளை, உடன்குடி பஜார் 4 சந்திப்பு வழியாக அனைத்து வாகனங்களும் வரும் மேற்கு ரோடு மற்றும் தூத்துக்குடி, திருச்செந்தூர், பரமன்குறிச்சி வழியாக வாகனங்கள் வரும் வடக்கு ரோடு முக்கிய சாலையாகும். இந்த இரு சாலையில்...
தீயணைப்பு நிலையம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்
விளாத்திகுளம்,அக்.30: விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் சாலை வழியாக விருச்சம்பட்டி, வேடப்பட்டி, ஓ.லட்சுமிநாராயணபுரம், நெடுங்குளம், ஈ.வேலாயுதபுரம், பல்லாகுளம், தத்தனேரி, குறளயம்பட்டி, இலந்தைகுளம், லெக்கம்பட்டி, மாமுநைனார்புரம், வேம்பார், காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விளாத்திகுளத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே போதிய வேகத்தடைகள் மற்றும் மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு...
தூத்துக்குடியில் உடல்நலம் பாதித்த மூத்த தொண்டருக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்
தூத்துக்குடி, அக். 29: தூத்துக்குடியில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக மூத்த தொண்டரை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். தூத்துக்குடி மாநகராட்சி 30வது வார்டிற்குட்பட்ட டூவிபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் வேலாயுதம்(88). அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராகவும், பயண சீட்டு பரிசோதகராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திமுகவில் 1981 முதல் உறுப்பினராக...
கால்வாய், வடிகால்களிலும் முட்செடிகள் அகற்ற நடவடிக்கை
வைகுண்டம்,அக்.29: தாமிரபரணியில் முள்செடிகளை அகற்றுவது போலவே கால்வாய், வடிகாலிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வெள்ளப்பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக அகரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, வைகுண்டம் மற்றும் ஏரல் சுற்றுப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. ஆற்று கரைகள் சேதமடைந்தன. இதை...
தூத்துக்குடியில் அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைபந்து போட்டி இன்று துவக்கம்
தூத்துக்குடி,அக்.29: தூத்துக்குடி மாவட்ட கூடை பந்தாட்ட கழக தலைவர் பிரம்மானந்தம், செயலாளர் சாகுல் சிவாஜிதீன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் 15வது ஆண்டாக வ.உ.சி துறைமுக ஆணைய கோப்பைக்கான அகில இந்திய அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் இன்று...
முக்காணி அரசு பள்ளி ஆண்டு விழா
ஆறுமுகநேரி,அக்.28: முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். கோவில்பட்டி தனியார் கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி, திருச்செந்தூர் கல்லூரி முதல்வர் சசிப்ரியா, டிசிடபிள்யூ நிறுவன உதவித்தலைவர் சுரேஷ், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சங்கரநாராயணன், துணைத்தலைவர் பரமசிவன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்...
நாசரேத் அருகே அகப்பைகுளம் ஆலயத்தில் அசன விழா
நாசரேத், அக்.28: நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 119வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நாசரேத், வாழையடி, அகப்பைகுளம், மாதாவனம், வகுத்தான்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர்...