தூத்துக்குடியில் சோலார் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி, ஜூன் 18: தூத்துக்குடியில் சோலார் திட்டம் தொடர்பான சிறப்பு முகாமை கனிமொழி எம்பி துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் ரூப்டாப் சோலார் திட்டத்தினை பயன்படுத்துவது தொடர்பாக 5 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. தனசேகர்நகர்...

புகையிலை பொருட்கள் மது பதுக்கிய 2பேர் கைது

By Karthik Yash
16 Jun 2025

கோவில்பட்டி, ஜூன் 17: கோவில்பட்டியில் விற்பனைக்காக மது மற்றும் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டியில் புகையிலை மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் எஸ்ஐ பொன்ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்காக புகையிலை மற்றும் மதுபாட்டில்களை...

ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

By Karthik Yash
16 Jun 2025

திருச்செந்தூர், ஜூன் 17: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7ம் தேதி மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக கோயில் வளாகத்தில் பல்வேறு திருப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அத்துடன் இந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருகைதரும் பக்தர்கள் கோயிலில் நெருக்கடியின்றி வந்து செல்வதற்கான...

கோவில்பட்டியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

By Karthik Yash
16 Jun 2025

கோவில்பட்டி, ஜூன் 17: கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) வகிக்கும் குருசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (17ம்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகர்பான், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார். ...

கோவில்பட்டியில் வரும் 17ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

By Karthik Yash
13 Jun 2025

கோவில்பட்டி, ஜூன் 14: கோவில்பட்டியில் வரும் 17ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் கோவில்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம்,...

இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
13 Jun 2025

கோவில்பட்டி, ஜூன் 14: கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சுரங்கப்பாதையின் இருபுறமும் உள்ள முழுமை பெறாத அணுகுசாலையை உடனே அமைக்க வேண்டும். மங்கள விநாயகர் கோயிலில் இருந்து மந்தித்தோப்பு வரையுள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு...

காயாமொழியில் விசாகத்தையொட்டி முருகர் வேடமணிந்து குழந்தைகள் ஊர்வலம்

By Karthik Yash
13 Jun 2025

திருச்செந்தூர், ஜூன் 14: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு காயாமொழியில் முருகர் வேடமணிந்த குழந்தைகளின் ஊர்வலம் நடைபெற்றது. காயாமொழி ஐக்கிய விநாயகர் கோயில் அருகே உள்ள செந்தில் ஆண்டவர் திடலில் குழந்தைகள் முருகர் வேடமணியும் விழா நடந்தது. திருப்புகழ் இன்னிசையுடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஏழு மாத குழந்தை உள்பட ஏராளமான குழந்தைகள் முருகர் வேடமணிந்து முக்கிய...

பெயிண்டரை தாக்கிய தொழிலாளி கைது

By Karthik Yash
12 Jun 2025

சாத்தான்குளம், ஜூன் 13: சாத்தான்குளம் அடுத்த நெடுங்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (58). பெயிண்டரான இவர், சம்பவத்தன்று இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த இதேபகுதியை சேர்ந்த தொழிலாளி மாயாண்டி முத்து (40) அவரை அவதூறாக பேசியதுடன் அரிவாளால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த மாரிமுத்துவை பொதுமக்கள் மீட்டு சாத்தான்குளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

உப்பாற்று ஓடை ரவுண்டானாவில்போக்குவரத்து காவலர் நியமனம் ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

By Karthik Yash
12 Jun 2025

தூத்துக்குடி, ஜூன் 13:தூத்துக்குடி உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் அருகே உள்ள உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு துறைமுகம் -...

எட்டயபுரம் பேரூராட்சியில் சீராக குடிநீர் வழங்கஅதிமுக வலியுறுத்தல்

By Karthik Yash
12 Jun 2025

எட்டயபுரம், ஜூன் 13: எட்டயபுரம் நகர அதிமுக செயலாளர் ராஜகுமார் தலைமையில் வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்ட்டன்பிரபு மற்றும் அதிமுகவினர், பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் வாறுகால் கட்டும் பணி அரைகுறையாக விடப்பட்டு உள்ளது. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு...