கழுகுமலை கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம் 26ம் தேதி தாரகாசூரன் சம்ஹாரம்

கழுகுமலை,அக்.23: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. வரும் 26ம் தேதி தாரகாசூரன் சம்ஹாரம் நடைபெறுகிறது. தமிழகத்தின் தென்பழநி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை அம்மனை எழுந்தருளச்...

புதிய தார் சாலை மழையால் சேதம் முறையாக அமைக்கவில்லை என புகார்

By Karthik Yash
22 Oct 2025

உடன்குடி,அக்.23: பரமன்குறிச்சி அருகே முறையாக அமைக்கப்படாத தார் சாலை தற்போது பெய்து வரும் மழையில் கரையோரங்கள் கரைந்து வருகிறது. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமன்குறிச்சியிலிருந்து கீழநாலுமூலைகிணறு, பிச்சிவிளை இணைப்பு மங்கம்மாள் சாலை சிதிலமடைந்து காணப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை புதியதாக அமைக்கப்பட்டது....

கோவில்பட்டி அருகே பைக் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலி

By Karthik Yash
22 Oct 2025

கோவில்பட்டி, அக். 23: கோவில்பட்டி பகுதிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம், 9வது தெருவைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன் (54). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று மதியம் தனது நண்பரும் கட்டிட தொழிலாளியுமான சங்கரலிங்கபுரம் 3வது தெருவை சேர்ந்த சவரிமுத்து (40) என்பவருடன் சித்திரம்பட்டிக்கு சென்று கறி வாங்கிக் கொண்டு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். பைக்கை முத்துமாரியப்பன் ஓட்டினார். ஆவல்நத்தம்...

திருச்செந்தூர் கோயிலுக்கு மின்கல வாகனம் உபயம்

By Karthik Yash
18 Oct 2025

திருச்செந்தூர், அக். 18: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் பயன்பாட்டுக்காக தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் 14 இருக்கைகள் கொண்ட மின்கல (பேட்டரி) வாகனத்தை உபயமாக வழங்கினர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள்...

சாத்தான்குளம் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனுக்கு 2 ஆண்டு சிறை

By Karthik Yash
18 Oct 2025

சாத்தான்குளம், அக். 18: சாத்தான்குளம் அருகே மனைவியை அவதூறாக பேசி, வீட்டு முன் இருந்த தட்டியை எரித்து கொலை மிரட்டல் விடுத்த கணவனுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளிவிளை சந்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெகதீஸ்வரன் (49)....

பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு

By Karthik Yash
18 Oct 2025

தூத்துக்குடி,அக்.18: தூத்துக்குடி வேலவன் வித்யாலாயா பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பாக தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நிலை அலுவலர் போக்குவரத்து முருகையா பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு வெடிப்பது...

தட்டார்மடம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பணம் நகை திருடிய வாலிபருக்கு வலை

By Karthik Yash
16 Oct 2025

சாத்தான்குளம், அக். 17: தட்டார்மடம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பணம், நகை திருடிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தட்டார்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார். இவரும், இவரது மனைவி அன்னலட்சுமி (50) மற்றும் குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், அங்கு மேஜை...

தூத்துக்குடியில் வியாபாரியை மிரட்டிய 2 பேர் கைது

By Karthik Yash
16 Oct 2025

ஸ்பிக்நகர், அக். 17: தூத்துக்குடி அடுத்த அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பூவெந்தசிங் மகன் பாலமுருகன். இவர், தெர்மல் நகர் அருகே உள்ள காதர் மீரான் நகர் பகுதியில் சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமான கடையில் வேலை பார்த்து வருகிறார். கடையில் இருந்த போது அங்கு வந்த 2 பேர், பாலமுருகனிடம் குளிர்பானம் வாங்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். உடனடியாக...

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

By Karthik Yash
16 Oct 2025

தூத்துக்குடி,அக். 17: தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பாதாளமுத்துவின் மகன் சுடலைமுத்து (18). கடந்த 6 மாதங்களாக வீட்டுக்குச் செல்லாமல் சாலையில் சுற்றித் திரிந்த இவர், நேற்று மதியம் அவர் ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்துக்குள் சென்றார். பின்னர் வெளியே வருவதற்காக சுவர் ஏறி குதிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த மின்கம்பி மீது...

தீபாவளி முன் பணம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் கோவில்பட்டியில் போராட்டம்

By Karthik Yash
15 Oct 2025

கோவில்பட்டி, அக்.16: தீபாவளி முன்பணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி முன்பணம் வழங்கவில்லை. இந்தாண்டு அரசு அறிவித்த பின்னரும் தீபாவளி முன்பணம் வழங்க நகராட்சி நிர்வாகம் மறுத்து வருவதை கண்டித்து நேற்று தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு...