திருச்செந்தூர் அரசு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் பாதை அமைக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு
திருச்செந்தூர், ஜூலை 1: திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குழாய் பதிப்பதற்கு பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் செயல்படுகிறது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பகத்சிங்...
திருப்புவனம் காவலாளி மரணத்தை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்
கோவில்பட்டி, ஜூலை 1: திருப்புவனம் காவலாளி மரணத்தை கண்டித்து கோவில்பட்டி அருகே சிதம்பரபுரத்தில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் கண்டன பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவில்பட்டி அருகே சிதம்பரபுரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட...
300 கிராம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி, ஜூன் 28: தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மொட்டக்கோபுரம் கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், சமீர்வியாஸ் நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் அருணாசலம்(28), கணபதிநகரை சேர்ந்த முருகன் மகன் உத்திரக்கண்ணன்(22) என்பது தெரிய வந்தது. பைக்கில் சோதனையிட்ட போது...
சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.28 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
தூத்துக்குடி, ஜூன் 28: சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.28,212 வழங்க வேண்டுமென பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த மரிய விக்டோரியாள் ராணி, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றிருந்தார். இதற்கான தவணையை செலுத்தும்போது ரெக்கவரி கட்டணம் சேர்த்துக் கட்டினால் தான்...
ஏரல் -மங்கலக்குறிச்சி ரோட்டில் ஒடிந்து விழுந்த மரக்கிளை
ஏரல், ஜூன் 28: ஏரல் - மங்கலக்குறிச்சி மெயின் ரோட்டில் வேப்பமரக்கிளை ஒடிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் மரக்கிளையை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் வடிகால் மடை அருகே நேற்று காலை 7 மணியளவில்...
உடன்குடியில் வாலிபர் கொலையில் தப்பிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
உடன்குடி, ஜூன் 26: உடன்குடியில் வாலிபர் கொலையில் தப்பிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். உடன்குடி தேரியூர் ஆண்டிவிளையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுயம்புலிங்கம். இவரது நண்பர் செல்வபுரத்தை சேர்ந்த தினேஷ் ஆகியோர் கடந்த 20ம் தேதி இரவு தேரியூர் ஆண்டிவிளை கிரிக்கெட் மைதான பகுதியில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த...
மெஞ்ஞானபுரம் அருகே சாராயம் ஊறல் போட்டவர் கைது
உடன்குடி, ஜூன் 26: மெஞ்ஞானபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டவரை போலீசார் கைது செய்தனர். மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் காபிரியேல்(47), கூலி தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தான் குடிப்பதற்காக சொந்தமாக சாராயம் வடித்து குடிக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர், தனது வீட்டிலேயே பழங்கள் மற்றும் சாராயத்திற்கான மூலப்பொருட்களை...
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வந்து விற்ற 4 பேர் கைது
தூத்துக்குடி, ஜூன் 26: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி குருவெங்கட்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சத்யா நகரில் 2 பைக்குகளில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி...
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு
தூத்துக்குடி, ஜூன் 25: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் இளம்பகவத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜூலை 7ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் இளம்பகவத்...