இலவச கண் பரிசோதனை முகாம்

  தூத்துக்குடி, செப். 15: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வைகுண்டம் புல்வாவழியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கட்சியின் தலைவர் விஜய் ஆணையின் பேரிலும், கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆனந்த் ஆலோசனையின்படியும் நடந்த இம்முகாமிற்கு அரிமா சங்க முன்னாள் ஆளுநர் ஜேகேஆர் ஜெ முருகன் தலைமை வகித்தார். வைகுண்டம் சட்டமன்றத் தொகுதி...

கோவில்பட்டியில் லோக் அதாலத் 558 வழக்குகளுக்கு சுமூகத்தீர்வு

By Francis
14 Sep 2025

  கோவில்பட்டி, செப். 15: கோவில்பட்டியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 558 வழக்குகளுக்கு சுமூகத்தீர்வு காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், மணிமேகலா ஆகியோர் முன்னிலையில்...

சாத்தான்குளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

By Francis
14 Sep 2025

  சாத்தான்குளம், செப். 15: சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவராஜேஸ் தலைமையில் குற்றவியல் நடுவர் நீதிபதி தேவி ரக்க்ஷா முன்னிலையில் நடந்தது. இதில் அமர்வு வழக்கறிஞராக ஜெர்லின் கலந்து கொண்டார் முகாமில் சிறுகுறு வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளுக்கு...

வேப்பலோடை அரசு பள்ளியில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ

By Karthik Yash
14 Sep 2025

ஆய்வு குளத்தூர்,செப்.14: வேப்பலோடை அரசு பள்ளியில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். ஓட்டப்பிடாரம் யூனியன், வேப்பலோடையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென வருகைதந்த மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர், கல்வித்திறன் குறித்து கேள்விகள் கேட்டார். 10ம் வகுப்பு மாணவர்களிடம் சமூக அறிவியல், பொருளாதாரம் குறித்து...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

By Karthik Yash
14 Sep 2025

கோவில்பட்டி, செப். 14: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இனாம்மணியாச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இனாம்மணியாச்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த இம்முகாமை தலைமை வகித்த கோவில்பட்டி யூனியன் பிடிஓக்கள் முத்துக்குமார், ஸ்டீபன் ரத்தினகுமார் ஆகியோர் துவக்கிவைத்தனர். இதில் பங்கேற்ற இனாம்மணியாச்சி, ஆலம்பட்டி, வடக்கு கங்கன்குளம், சீனிவாச நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த...

மாதவநாயர் காலனி கடற்கரை பகுதியில் புறக்காவல் நிலையம்

By Karthik Yash
14 Sep 2025

தூத்துக்குடி, செப். 14: தூத்துக்குடி மாதவநாயர் காலனி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்துவைத்தார். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நாயர் காலனி கடற்கரை பகுதியில் காவல் துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ரிப்பன் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘மக்களின் நீண்ட...

காயல்பட்டினத்தில் மைத்துனரை வெட்டியவர் கைது

By Karthik Yash
12 Sep 2025

ஆறுமுகநேரி, செப்.13: உடன்குடி காலன்குடியிருப்பு சாயக்காரதெருவை சேர்ந்தவர் முருகன் மகன் முத்து கணேஷ்(24). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது சகோதரி ஐஸ்வர்யா, காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கார்த்திக்(32). என்பவரை திருமணம் செய்து அப்பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு...

விபத்துகளை தவிர்க்கும் வகையில் மூக்குப்பீறியில் வேகத்தடைகளுக்கு எச்சரிக்கை வர்ணம் பூசப்படுமா?

By Karthik Yash
12 Sep 2025

நாசரேத், செப்.13: விபத்துகளை தவிர்க்கும் வகையில் மூக்குப்பீறி பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு எச்சரிக்கை வர்ணம் பூச வேண்டுமென மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி முன்பு மெயின் ரோட்டில் இரு பக்கமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. தாழ்வாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் பூசப்பட்டிருந்த வெள்ளை வர்ணமும் தற்போது அழிந்துள்ளது. இதன்...

திருச்செந்தூர் ஆர்டிஓ பொறுப்பேற்பு

By Karthik Yash
12 Sep 2025

திருச்செந்தூர், செப்.13: திருச்செந்தூர் ஆர்டிஓவாக கவுதம் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) இருந்த கவுதம் பதவி உயர்வு பெற்று ஆர்டிஓவாக திருச்செந்தூரில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவுதம் ஆர்டிஓவாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் பழைய ஆர்டிஓ சுகுமாறன் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.நிகழ்ச்சியின் போது,ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் பாலசுந்தரம்...

தூத்துக்குடியில் செப். 16,17ல் தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கு

By Karthik Yash
11 Sep 2025

தூத்துக்குடி,செப்.12: கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வரும் 16, 17 (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்...