மடத்தூர் அரசு சுகாதார மையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

தூத்துக்குடி, செப். 19: மடத்தூர் அரசு மருத்துவமனை சுகாதார மையத்தில் சிப்காட் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. இதில் ஆரம்பகட்ட தீயை எவ்வாறு அணைப்பது, தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது, தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது, தீயில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? காயமடைந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து...

குலசை கோயிலில் அம்மன் சப்பர வீதியுலா

By Karthik Yash
17 Sep 2025

உடன்குடி,செப்.18: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆவணிமாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மன் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இதையொட்டி காலை 6மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 8மணிக்கு காலசந்திபூஜை, மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரத்தில் வீதி...

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து-கண்டெய்னர் லாரி மோதி டிரைவர் காயம்

By Karthik Yash
17 Sep 2025

கோவில்பட்டி, செப்.18: தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நடுவபட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென நிலைகுலைந்து ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி...

கஞ்சா விற்றவர் கைது

By Karthik Yash
17 Sep 2025

ஸ்பிக்நகர், செப்.18: முள்ளக்காட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ,வரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன், தனிப்பிரிவு காவலர் ஜாண்சன்,...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொழிலாளிக்கு 22 ஆண்டு சிறை

By Karthik Yash
16 Sep 2025

தூத்துக்குடி,செப்.17: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 22 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில்...

புளியம்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்பு

By Karthik Yash
16 Sep 2025

ஓட்டப்பிடாரம்,செப். 17: புளியம்பட்டி அருகே என்.புதூரில் கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளி மானை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டனர். புளியம்பட்டியை அடுத்துள்ள என்.புதூர் கிராமத்தில் உள்ள 40 அடி கிணற்றுக்குள் புள்ளி மான் தவறி விழுந்துள்ளது. இது பற்றி அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை...

வாகனம் மோதி மிளா படுகாயம்

By Karthik Yash
16 Sep 2025

உடன்குடி,செப்.17: உடன்குடி அருகேயுள்ள சீர்காட்சி பகுதியை யொட்டி அனல் மின்நிலைய வளாகம் உள்ளது. தற்போது அனல்மின்நிலைய வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதால் அங்குள்ள மிளா உள்ளிட்ட விலங்குகள் தற்போது தண்ணீர் தேடி அருகிலுள்ள ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த இருநாட்களுக்கு முன்பு சீர்காட்சி-பிச்சிவிளை ரோட்டில் உள்ள விஜயநாராயணபுரத்தில் சாலையை கடந்த மிளா மீது அந்த வழியாக...

தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தூத்துக்குடியில் அண்ணா சிலைக்கு மரியாதை

By Karthik Yash
15 Sep 2025

தூத்துக்குடி, செப்.16: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் ரவுண்டானாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், மீன்வளம்-...

டிராக்டர் தாறுமாறாக ஓடி டிரைவர் பலி

By Karthik Yash
15 Sep 2025

நாசரேத் செப்.16: நாசரேத் அருகே டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால், டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாசரேத் அருகே உள்ள முதலைமொழி நடுத்தெருவை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் பர்னபாஸ் (55). இவர் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். நேற்று பர்னபாஸ் டிராக்டரை...

புதியம்புத்தூரில் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு

By Karthik Yash
15 Sep 2025

ஓட்டப்பிடாரம்,செப்.16: ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் அவரது படத்திற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்குட்பட்ட மேலமடம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்...