திருச்செந்தூர் அருகே பிச்சிவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
திருச்செந்தூர், ஜூலை 18:திருச்செந்தூர் அருகே பிச்சிவிளையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். முகாமில் அதிகளவில் கலைஞர் உரிமை தொகைக்காக பெண்கள் மனு அளித்தனர். திருச்செந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேல திருச்செந்தூர், பிச்சிவிளை ஊராட்சிப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பிச்சிவிளையில் நடந்தது....
சிப்காட் வளாகத்தில் ரூ.1.85 லட்சம் காப்பர் வயர் திருடு போலீசார் விசாரணை
தூத்துக்குடி, ஜூலை 18:தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மில்லர்புரத்தில் இருந்து ஒலிபரப்பாகும் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு திடீரென தடைபட்டது. இதுகுறித்து அலுவலக உதவி பொறியாளர் அமல்ராஜ் (59) ஆய்வு மேற்கண்டார். அப்போது வானொலி நிலையம்...
ஏரல் அருகே பெருங்குளம் குளத்தில் தண்ணீர் வற்றி வருவதால் நெல், வாழைகள் கருகும் அபாயம்: தனிகால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
ஏரல், ஜூலை 18: பெருங்குளம் குளத்தில் தண்ணீர் வற்றி வருவதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ள நெல், வாழை கருகி வருவதால் விவசாயிகள் விரக்தியடைந்தள்ளனர். எனவே மருதூர் கீழக்காலில் தனிக்கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் குளம் 680 ஏக்கர் பரப்பளவுடையது. இந்த குளத்திற்கு மருதூர் அணையில் இருந்து...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
கோவில்பட்டி, ஜூலை 16: கோவில்பட்டி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை கனிமொழி எம்பி துவக்கிவைத்தார். கோவில்பட்டி நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நேற்று துவக்கியது. சத்யபாமா திருமண மண்டபத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்...
சாத்தான்குளம் அருகே புதர் மண்டிக்கிடக்கும் பயணியர் நிழற்குடை
சாத்தான்குளம், ஜூலை 16: சாத்தான்குளம் அருகே புதர் மண்டிக்கிடக்கும் பயணியர் நிழற்குடையை விரைவில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம் பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மாடத்தி அம்மன் கோயில், நகனை விலக்கு பகுதியில் பயணியர் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் செல்வதற்கான பெரிதும்...
ஏஐ தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
செய்துங்கநல்லூர், ஜூலை 16: தூத்துக்குடி மாவட்டம், கீழ வல்லநாடு மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கனிமொழி எம்பி முயற்சியால் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசுகையில் ‘‘...
தூத்துக்குடி அண்ணாநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மருத்துவ முகாம்
தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி அண்ணாநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மருத்துவ முகாம் நடந்தது. தூத்துக்குடி அண்ணாநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் தூத்துக்குடி நலக்குடில் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமினை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்...
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்- சங்கர் காலனி இணைப்பு சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
தூத்துக்குடி, ஜூலை 14:தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் முன்பிருந்து சங்கர் காலனி வரையிலான இணைப்புச்சாலையை நிறைவேற்றித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி 3வது மைல் முதல் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் வரையிலான தமிழ்வழிச்சாலையில் கடும் போக்குவரத்து...
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை துவக்கம்
தூத்துக்குடி, ஜூலை 14: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (15ம் தேதி) துவங்கி ஆக.14ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில்,...