அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை
தூத்துக்குடி, ஜூலை 23: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்துவரும் அனைத்து வளர்ச்சித்திட்டப்பணிகளையும் விரைவில் முடிப்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குத் தலைமை வகித்த மேயர்...
எட்டயபுரம் அருகே பீக்கிலிபட்டியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி, ஜூலை 22: எட்டயபுரம் அருகேயுள்ள பீக்கிலிபட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள் இதுகுறித்த கோரிக்கை மனுவை தூத்துக்குடி கலெக்டரிடம் அளித்தனர். மனு விவரம்: எங்கள் கிராமப் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதுக்கடை அமைக்கும் முயற்சிகளை கைவிட...
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுப்பினர் நியமன பதவி
தூத்துக்குடி, ஜூலை 22: தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1998) தமிழ்நாடு சட்டம் 30/2025-60ஜி மூலம் திருத்தப்பட்டவாறான பிரிவு 37(1)ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடம் இருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல்...
அத்தியடிதட்டில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
உடன்குடி, ஜூலை 22: உடன்குடி அருகே அத்தியடிதட்டில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் தீவிரமாக நடந்து வருகிறது. மக்களுடன் ஸ்டாலின் செயலியில் இணைக்க தெற்கு மாவட்ட செயலாளரும்,...
திருச்செந்தூர் வட்டார செஸ் போட்டி
ஆறுமுகநேரி, ஜூலை 21: சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் திருச்செந்தூர் வட்டார அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வட்டார அளவில் பள்ளி மாணவ,...
தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், வளர்ச்சி திட்டங்கள் தொடரவும்: திமுக ஆட்சி மீண்டும் அமைய மக்கள் ஆதரவு தரவேண்டும்
தூத்துக்குடி, ஜூலை 21: தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், வளர்ச்சி திட்டங்கள் தொடரவும் மீண்டும் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள்விழா, திமுக அரசின்...
தேசிய அளவில் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளை கொண்டது தமிழ்நாடு
தூத்துக்குடி, ஜூலை 21: இந்தியாவிலேயே மிகச்சிறந்த அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தூத்துக்குடியில் கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அழகர் பப்ளிக் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதை குத்துவிளக்கேற்றி...
திருச்செந்தூரில் ஆட்டோக்கள் வாகன தணிக்கை
திருச்செந்தூர், ஜூலை 19:திருச்செந்தூர் பகுதியில் ஆட்டோக்களை தாறுமாறாகவும், வெளியூர் ஆட்டோக்களை அனுமதியின்றி இயக்குவதாகவும், அதிக ஆட்களை ஏற்றி செல்வதாகவும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், ஆட்டோக்களின் பின் பக்கத்தில் அமர வைத்து ஓட்டுவதாகவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோரது உத்தரவின் பேரில்...
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்ேனற்பாடுகள்
தூத்துக்குடி,ஜூலை 19: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர்...