எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம்,செப்.24: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க எட்டயபுரம் தாலுகா செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். கடந்த ஆண்டு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பாசி, உளுந்து...
சாலையோரம் விபத்து ஏற்படுத்தும் மின்கம்பம் மாற்றப்படுமா?
சாத்தான்குளம்,செப்.23: தெற்குநரையன் குடியிருப்பில் சாலையோரம் விபத்து ஏற்படுத்திடும் வகையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு நரையன்குடியிருப்பில் இருந்து மணிநகர் சாலையோரம் மக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையில் இருப்பினாலான மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்திற்கு எர்த் கிடைக்கும் வகையில் கம்பி...
பொன் விழா ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் பொன் விழா ஆண்டு திருவிழா
கொடியேற்றத்துடன் தொடக்கம் சாத்தான்குளம், செப். 23: சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிவிளை பார் போற்றும் பரலோக அன்னை ஆலய திருவிழா, நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா அக்.2ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் காலை நாள் திருப்பலி, மாலை சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமையில்...
டீக்கடைக்குள் புகுந்த அரசு விரைவு பஸ்
எட்டயபுரம், செப். 23: எட்டயபுரம் அருகே டீக்கடைக்குள் அரசு விரைவு பேருந்து புகுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு விரைவு பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்தை ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த சொரிமுத்து ஓட்டினார். நேற்று முன்தினம்...
நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
நாசரேத், செப். 22: புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி நிறைவு செய்த நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய அறிவுசார் நிறுவனம் சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம், பல்வேறு பள்ளிகளில்...
கச்சனாவிளையில் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
நாசரேத்,செப்.22: நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை ஊராட்சிக்குட்பட்ட கச்சனாவிளை மெயின்ரோட்டில் பழுதடைந்த நிலையில் பயணிகள் நிழற்குடைஉள்ளது. இந்த நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவித பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன் அருகே கோயில், பள்ளிக்கூடம் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில்...
ஆலந்தலையில் ரூ.80 லட்சத்தில் மீன் வலை பின்னும் கூடம்
திருச்செந்தூர், செப்.22: திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூ.80 லட்சம் மதிப்பில் மீன் வலை பின்னும் கூடம் கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். ஆலந்தலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் மீன் வலை பின்னும் கூடம் கட்டுவற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் கவுதம் தலைமை வகித்தார்....
கோவில்பட்டி, கழுகுமலை, விஜயாபுரி செட்டிகுறிச்சி பகுதியில் நாளை மின்தடை
கோவில்பட்டி, செப். 19: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கோவில்பட்டி, கழுகுமலை, விஜயாபுரி செட்டிகுறிச்சி பகுதியில் நாளை (20ம் தேதி) மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய...
விஸ்வபிரம்மா ஜெயந்தி
திருச்செந்தூர், செப். 19: திருச்செந்தூரில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா நடந்தது. இதில் மண்டப அபிவிருத்தி நன்கொடையாளர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை தலைவர் சங்கரவடிவேல் ஆச்சாரி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் மகேஷ், துணைத் தலைவர்கள் ஆறுமுகம், அருணாசலம், செந்தில்ஆறுமுகம் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். ...