மாலத்தீவு அருகே தோணியிலிருந்து கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி கேங்மேன் உடல் மீட்பு
தூத்துக்குடி,செப்.27: தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, காந்தி நகர் மீனவர் காலனியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (40). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தோணியில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெகதீஷ் கடந்த 19ம் தேதி தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு உணவுப்பொருள்களை ஏற்றிச்சென்ற தோணியில் 12 பேருடன்...
பலத்த சூறைக்காற்று எதிரொலி தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை பலத்த சூறைக்காற்று எதிரொலி தூத்துக்குடியில் விசைப்படகுகள்
தூத்துக்குடி, செப்.27: வங்கக்கடலில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலிலும், மன்னார் வளைகுடா பகுதி கடற்பகுதியில் 45 கி.மீட்டரிலிருந்து 55 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம்...
புளியம்பட்டி அருகே அய்யப்பபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை
ஓட்டப்பிடாரம், செப். 26: புளியம்பட்டி அருகே மருதன்வாழ்வு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்துவைத்தார். ஓட்டப்பிடாரம் யூனியன், மருதன்வாழ்வு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக மருதன்வாழ்வு கிராமத்தில் உள்ள கடைக்குச்சென்று குடிமைப்பொருட்கள் வாங்கிவந்த நிலையில் தங்கள் கிராமத்திலேயே பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும்...
விளாத்திகுளத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட பேரவை கூட்டம்
விளாத்திகுளம், செப்.26: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விளாத்திகுளம் வட்டக்கிளையின் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் - எட்டயபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம் முன்பு நடந்த கூட்டத்திற்கு வட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். வட்டத்துணைத் தலைவர்கள் ஆனந்தச்செல்வம், பரணிதரன் ஆகியோர் வரவேற்றனர். வட்டச்செயலாளர் மாரிச்செல்வம் அறிக்கை...
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 2ம் நாளில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா
உடன்குடி,செப்.26: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 2ம்நாள் விழாவில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். உலக அளவில் பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 23ம்தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 7.30 வரை...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா
உடன்குடி, செப். 25: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு சந்தையடியூர் தசரா குழு சார்பில் சிதம்பரேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு செல்லும் வழியில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாலை முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு டிபன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. அன்னதானத்தை சந்தையடியூர் ஊர்த்தலைவர் மால் வாசுதேவன் துவக்கி வைத்தார். இதில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர்குழு...
தூத்துக்குடியில் மீனவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் விஜய் என்ற பானை விஜய் (22). இவர் கடந்த மாதம் 22ம்தேதி தூத்துக்குடி மச்சாது பாலம் அருகே முன்விரோதம் காரணமாக உப்பளத்தில் உள்ள ஷெட்டில் நண்பர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த...
பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
குளத்தூர், செப். 25: விளாத்திகுளம் பாரதி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி ஜோதிலட்சுமி(47). இவரது மகள் முத்துக்கனி(21), மருமகன் முத்துராஜ்(23) ஆகியோர் நேற்று முன்தினம் பைக்கில் குலசைக்கு முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று மாலை போட்டுக்கொண்டு மூவரும் அதே பைக்கில் வீடு திரும்பினர். குறுக்குச்சாலை வழியாக குளத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது பைக்கில் இருந்து தவறி விழுந்த...
சாத்தான்குளம் அருகே வேலாயுதபுரத்தில் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சாத்தான்குளம், செப். 24: வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாத்தான்குளம் அருகே சிதம்பரபுரம் பங்கிற்குட்பட்ட வேலாயுதபுரம் புனித குழந்தை தெரசம்மாள் ஆலய திருவிழா, நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா அக்.1ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் மாலை 6:30 மணிக்கு சொக்கன்குடியிருப்பு அருட்தந்தை லியோன் தலைமையில்...