தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி, ஜூலை 25: தூத்துக்குடியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரசுத்துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 15,16,17வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தபால்தந்தி...
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருச்செந்தூர், ஜூலை 25: தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30...
ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு
விளாத்திகுளம், ஜூலை 24: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் மகன் பரமசிவன் (28). அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் முரளி (26), நாகராஜ் மகன் ஜெயராம் (25) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக்...
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை
தூத்துக்குடி, ஜூலை 24:தூத்துக்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமில் உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிக்கு அதற்கான ஆணையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 40, 46 மற்றும் 47வது வார்டுகளுக்கான...
தூத்துக்குடியில் எடப்பாடி பழனிச்சாமி பிரசார இலச்சினை
தூத்துக்குடி, ஜூலை 24: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டம் வருகை குறித்த பிரசார இலச்சினையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டார். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற 2026ம் ஆண்டு தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர், ஆக.1,2ம் தேதிகளில் தூத்துக்குடி...
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்
தூத்துக்குடி, ஜூலை 23: குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6750 மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வு வரும்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத...
குளத்தூரில் தென்னிந்திய கபடி போட்டி
குளத்தூர், ஜூலை 23: குளத்தூரில் ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட தென்னிந்திய அளவிலான ஆண், பெண் கபடிப் போட்டியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் அமைச்சர் கீதாஜீவன் துவக்கிவைத்தார். குளத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் ஆனித்திருவிழா, காமராஜர் 123வது பிறந்தநாள் விழா வையொட்டி ஜாலிப்ரண்ட்ஸ் கபடி குழு சார்பில் 61ம் ஆண்டு ராஜநிஷா கோப்பைக்கான...
அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை
தூத்துக்குடி, ஜூலை 23: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்துவரும் அனைத்து வளர்ச்சித்திட்டப்பணிகளையும் விரைவில் முடிப்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குத் தலைமை வகித்த மேயர்...
எட்டயபுரம் அருகே பீக்கிலிபட்டியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி, ஜூலை 22: எட்டயபுரம் அருகேயுள்ள பீக்கிலிபட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள் இதுகுறித்த கோரிக்கை மனுவை தூத்துக்குடி கலெக்டரிடம் அளித்தனர். மனு விவரம்: எங்கள் கிராமப் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதுக்கடை அமைக்கும் முயற்சிகளை கைவிட...