திருச்செந்தூரில் இயல்பு நிலை திரும்பியது
திருச்செந்தூர், டிச.1:கடந்த 3 தினங்களாக இடைவிடாது பெய்த மழை நேற்று சற்று ஓய்வுபெற்றதால் திருச்செந்தூரில் இயல்பு நிலைக்கு திரும்பியது. டிட்வா புயல் எதிரொலியாக தென்மேற்கு வங்க கடலோரம் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே கனமழையும், இடைவிடாது மழையும் பெய்தது. திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இந்நிலையில் நேற்று...
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி, டிச. 1:தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு 20வது வார்டு இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர திமுக செயலாளர்...
கோவில்பட்டி அருகே பைக் கவிழ்ந்து டிரைவர் பலி
கோவில்பட்டி, டிச.1: கோவில்பட்டி அருகே சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார். வில்பட்டி சீனிவாசன் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (58). கார் டிரைவர். இவரது மனைவி கெங்காலட்சுமி (50). சம்பவத்தன்று சங்கரநாராயணன் தனது மனைவியுடன் பைக்கில் கோவில்பட்டி - கடலையூர்...
சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
சாத்தான்குளம், நவ. 29: சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் அரசியலமைப்பு நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளர் சுடலை தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்...
தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
கோவில்பட்டி, நவ. 29: கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கதிர்வேல் நகரை சேர்ந்த சங்கிலி பாண்டி மகன் சக்திவேல் (22), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இரவு மந்தித்தோப்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த சாஸ்திரி நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (28) என்பவர் சக்திவேலை மது அருந்த மந்தித்தோப்பு கண்மாய்...
எட்டயபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்
எட்டயபுரம், நவ.29: எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்களை சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். மொத்தம் 90 மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிக்குமார், பள்ளி செயலாளர் ராம்குமார்...
வள்ளியூர் சாமியார் பொத்தையில் முத்துகிருஷ்ணசுவாமி 112வது குருபூஜை
வள்ளியூர்,நவ.28: வள்ளியூர் சாமியார் பொத்தையில் முத்துகிருஷ்ணசுவாமியின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். முத்துகிருஷ்ணசுவாமி 112வது குருபூஜை வரும் டிச.19ம் தேதி நடைபெறவுள்ளது. முதல்நாளான டிச.19ம் தேதி காலையில் தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து முத்துகிருஷ்ணசுவாமி மண்டபத்தில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. விழாவின் 30ம் தேதி குருபூஜையை முன்னிட்டு காலை 4 மணி...
விகேபுரம் அருகே 13 அடி ராஜ நாகம் பிடிபட்டது
விகேபுரம்,நவ.28: விகேபுரம் அருகேயுள்ள திருப்பதியாபுரத்தை சேர்ந்த மாடக்கண்ணு மகன் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டின் அருகே ராஜா நாகம் பதுங்கி இருப்பதாக பாபநாசம் வனச்சரகர் குணசீலன் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வன உயிரின காவலர் முத்துக்குமார், வன காவலர் அசோக்குமார் சூழல் காவலர்கள் மணிகண்டன் ஆசீர், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து குமார் வீட்டில்...
பொதுமக்கள் அச்சம் வேண்டாம் தமிழாக்குறிச்சி அணையில் நீர்க்கசிவு அடைக்கும் பணி
நெல்லை, நவ. 28: பாளை. அருகே தமிழாக்குறிச்சி அணையில் நீர்க்கசிவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைத்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் உறுதி அளித்தார். நெல்லை மாவட்டம், திடியூர் அருகே தமிழாக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் பச்சையாறு தண்ணீரையும் இணைக்கும்...