கிராம மக்கள் நள்ளிரவில் சாலை மறியல்

உடன்குடி,அக்.8: தூத்துக்குடி, முத்தையாபுரம், கக்கன்ஜி நகரை சேர்ந்த சுதாகரின் மகன் சிவா (20), இவரும், கோவில்பட்டி, லிங்கம்பட்டி புதுகாலனியை சேர்ந்த ராஜ்குமாரின் மகன் சத்திய செல்வன் (22), திருச்செந்தூர் அருகேயுள்ள நா. முத்தையாபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகன் சிவகுமார் (22) ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர். இவர்களுக்கும், குரும்பூர் அருகேயுள்ள குரங்கன்தட்டு பகுதியைச் சேர்ந்த...

கோவில்பட்டியில் குடியிருப்பு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
06 Oct 2025

கோவில்பட்டி, அக். 7: இ-பட்டாவில் பதிவேற்றம் செய்யக்கோரி கோவில்பட்டியில் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி தியாகி லீலாவதி நகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் இ-பட்டாவில் பதிவேற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாரியப்பன் தலைமை வகித்தார். குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் உத்தண்டுராமன் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை...

ராமச்சந்திராபுரத்தில் ரேஷன் கடை அங்கன்வாடி அமைக்க வலியுறுத்தல்

By Karthik Yash
06 Oct 2025

தூத்துக்குடி, அக். 7: விளாத்திகுளம் அருகேயுள்ள ராமச்சந்திராபுரம் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை இல்லை. அருகே உள்ள கெச்சிலாபுரம் சென்றுதான் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் முதியவர்கள் சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதுபோல...

25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
06 Oct 2025

தூத்துக்குடி, அக். 7: தூத்துக்குடியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க...

பிரகாசபுரம் புனித மிக்கேல் அதிதூதர் கெபியில் அசன விருந்து

By Karthik Yash
30 Sep 2025

நாசரேத், அக். 1: பிரகாசபுரம் புனித மிக்கேல் அதிதூதர் கெபியில் நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் புனித மிக்கேல் அதிதூதர் கெபியின் திருவிழாவை முன்னிட்டு சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்தினை தொடங்கி வைத்தார். முன்னதாக கெபியின் முன்...

ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை விழா

By Karthik Yash
30 Sep 2025

ஆறுமுகநேரி, அக். 1: ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் தலைமையில் பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் அசோக்குமார், சிவா, முத்து, பாலசிங், முருகன், கமலச்செல்வி, வசந்தி,...

ஸ்டேட் வங்கி சார்பில் கோவில்பட்டி ஜி.ஹெச்சுக்கு பேட்டரி ஆம்புலன்ஸ் வழங்கல்

By Karthik Yash
30 Sep 2025

கோவில்பட்டி, அக். 1: கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி ஸ்டேட் வங்கி சார்பில் பேட்டரியில் இயங்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆம்புலன்ஸ் சாவியை கலெக்டர் இளம்பகவத்திடம் ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப் வழங்கினார். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் நோயாளிகள்...

தூத்துக்குடியில் ஆட்டோ - பைக் விபத்தில் தியேட்டர் பங்குதாரர் பலி

By Karthik Yash
30 Sep 2025

தூத்துக்குடி, செப். 30: தூத்துக்குடியில் ஆட்டோ - பைக் மோதிய விபத்தில் தியேட்டர் பங்குதாரர் பலியானார். தூத்துக்குடி பாளை ரோடு நேரு தோட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(62). இவர், பானுமதி தியேட்டரின் பங்குதாரர் ஆவார். நேற்று முன்தினம் இரவு எட்டயபுரம் சாலையில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அண்ணாநகர் மெயின் ரோடு,...

குலசை தசரா திருவிழா 6ம் நாளில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் வீதியுலா

By Karthik Yash
30 Sep 2025

உடன்குடி, செப். 30: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 6ம் நாளில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். லசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கடந்த 23ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு கோலங்களில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது....

கயத்தாறு அருகே ஊரணியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை

By Karthik Yash
30 Sep 2025

தூத்துக்குடி,செப்.30: கயத்தாறு அருகே முடுக்கலான்குளத்தில் ஊரணியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கயத்தாறு வட்டம் முடுக்கலான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊர் நாட்டாமை முத்துப்பாண்டி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முடுக்கலான்குளம் கிராமத்தில் 0.83 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள வண்டிப்பாதை, வாய்க்கால் மற்றும்...