கானம் பேரூராட்சியில் ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்

உடன்குடி, அக். 11: கானம் பேரூராட்சியில் ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். குரும்பூர் அருகேயுள்ள கானம் பேரூராட்சி அலுவலகம் எதிரே ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் அந்தோணி காட்வின்...

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

By Karthik Yash
10 Oct 2025

தூத்துக்குடி,அக்.11: கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அக்டோபர்-2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் இன்று (11ம் தேதி)இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்,...

ஏரலில் பைக் மீது மினிலாரி மோதி வாலிபர் பரிதாப பலி

By Karthik Yash
09 Oct 2025

ஏரல், அக்.10: ஏரலில் பைக் மீது மினிலாரி மோதியதில் வாலிபர் நசுங்கி உயிரிழந்தார். ஏரல் அருகேயுள்ள கீழமங்கலகுறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகன் முத்துவேல்ராஜ் (23). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவர் நேற்று மதியம் வீட்டிற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். ஏரல் பாரதியார் ரோட்டில் காவல் நிலையம் அருகே வந்தபோது பின்னால் வந்த மினிலாரி மோதியதில் இவர்...

சாயர்புரம் போப் பள்ளியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அறிக்கை

By Karthik Yash
09 Oct 2025

ஏரல், அக்.10: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நாளை (11ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்...

கோவில்பட்டி அருகே இடைசெவலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

By Karthik Yash
09 Oct 2025

கோவில்பட்டி, அக். 10: கோவில்பட்டி அருகே இடைசெவலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. தலைமை வகித்த கோவில்பட்டி பிடிஓ ஸ்டீபன் ரத்தினகுமார், தாசில்தார் பாலசுப்பிரமணியன், முகாமை துவக்கிவைத்தனர். இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற வில்லிசேரி, இடைசெவல், சத்திரப்பட்டி ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனை பட்டா, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், புதிய...

பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி என்எஸ்எஸ் திட்ட சிறப்பு முகாம்

By Karthik Yash
08 Oct 2025

உடன்குடி,அக்.9: பணிக்கநாடார்குடியிருப்பு கணேஷர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நல்லான்விளையில் வைத்து நடந்தது. கணேசர் பள்ளியின் செயலர் முருகன், ஆட்சி மன்ற குழு தலைவர் ராஜசேகர், ஆட்சி மன்ற குழு பொருளாளர் மோகன் ஆகியோர் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர். முகாமின் சிறப்பு நிகழ்ச்சிகளாக மரக்கன்று நடுதல், பனை விதை...

சாயர்புரம் போப் பள்ளி மாணவர்கள் சாதனை

By Karthik Yash
08 Oct 2025

ஏரல், அக்.9: முதல்வர் கோப்பைக்கான கையுந்து போட்டியில் சாயர்புரம் போப் நேமல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நாகப்பட்டினத்தில் 2025ம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கையுந்து மாநில அளவிலான போட்டி நடந்தது. இதில் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடியதில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப்...

காது திறன் கருவிகள் விற்பனையில் ஹியரிங் எய்ட் சென்டர் சிறப்பு சேவை

By Karthik Yash
08 Oct 2025

நெல்லை, அக். 9: கண், உடல் பரிசோதனைகளைப் போல காதுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசோதனைகளை செய்ய வேண்டும். கேட்கும் திறன் குறைந்திருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து கொள்ளும் போது எளிதாக சரிசெய்யலாம். எச்எசி என்கிற ‘ஹியரிங் எய்ட் சென்டர்’ நிறுவனம் காது கேட்கும் திறனைப் பரிசோதனை செய்வதற்காக இந்தியாவில் முதல் தனித்துவமான நிறுவனமாக 1980ல் சென்னையில்...

ரூ.42 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி

By Karthik Yash
07 Oct 2025

கோவில்பட்டி, அக். 8: நாலாட்டின்புதூரில் ரூ.42 லட்சம் மதிப்பில் புதிதாக சாலை அமைக்கும் பணியை முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் துவக்கிவைத்தார். கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் புதிதாக சாலை வசதி செய்துதரக் கோரி கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு...

கோயில் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

By Karthik Yash
07 Oct 2025

சாத்தான்குளம், அக். 8: சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் சாஸ்தா கோயில் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகே வடக்கு பன்னம்பாறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி (74). பன்னம்பாறை மருதமலை அய்யனார் சாஸ்தா, சுடலை ஆண்டவர் கோயில் தர்மகர்த்தாவாக இருந்துவருகிறார். கடந்த 5ம் தேதி அவருக்கு செல்போனில் அழைத்துப்பேசிய அதே...