இ-பைலிங் முறையை கண்டித்து சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம், டிச. 5:நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை கண்டித்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நீதிமன்றங்களில் உள் கட்டமைப்பு இல்லாமல் இ-பைலிங் முறை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை கண்டித்து சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்க...

கோவில்பட்டியில் விசிக ஆலோசனை கூட்டம்

By Karthik Yash
04 Dec 2025

கோவில்பட்டி, டிச. 5: தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவில்பட்டியில் நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, வரும் 28ம் தேதி கோவில்பட்டிக்கு வருகை தருகிறார். இதையொட்டி நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட...

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி

By Suresh
03 Dec 2025

திருச்செந்தூர், ஜன. 4: திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருநெல்வேலி, பாலக்காடு...

தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு

By Suresh
03 Dec 2025

தூத்துக்குடி, ஜன. 4: தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர்,...

புத்தாண்டு முதல் வெள்ளியை முன்னிட்டு ஆலந்தலையில் சிறப்பு திருப்பலி

By Suresh
03 Dec 2025

திருச்செந்தூர் ஜன. 4: திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மதியம் 11.30 மணிக்கு ஆலய பங்குதந்தை சில்வெஸ்டர், வார வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் மறையுரை...

முள்ளக்காட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

By Karthik Yash
02 Dec 2025

ஸ்பிக்நகர், டிச. 3: தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு சந்தோஷம் நகரை சேர்ந்தவர் கருப்பையா மகன் காளிமுத்து(48). லாரி டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும், இவரது மனைவி சித்ராவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே காளிமுத்து வீட்டின் படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார். மனைவி சித்ரா மற்றும் குழந்தைகள்...

தாமிரபரணி கரையில் தூய்மை பணி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

By Karthik Yash
02 Dec 2025

உடன்குடி, டிச. 3: தேசிய மாசு கட்டுப்பாட்டு நாளை முன்னிட்டு பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தாமிரபரணி கரையோர பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். குரும்பூர் அருகேயுள்ள பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், தேசிய மாசு கட்டுப்பாட்டு நாளை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரை பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். பள்ளி செயலாளர் முருகன் தலைமை...

உலக நன்மைக்காக தீபமேற்றி வழிபாடு

By Karthik Yash
02 Dec 2025

உடன்குடி, டிச. 3: திருச்செந்தூர், உடன்குடி ஒன்றிய பகுதிகளில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. நோய்கள், திருமண தடங்கல், கஷ்டங்கள் நீங்கவும், வீடுகள் சுபிட்சமாக இருக்கவும், நாட்டின் நன்மை, உலக நன்மைக்காகவும் சிவில்விளைபுதூர், தைக்காவூர், அம்மன்புரம், சீர்காட்சி, பிச்சிவிளைபுதூர், வட்டன்விளை, குடியிருப்பு விளை, மேலப்பள்ளிப்பத்து, செந்தாமரைவிளை, தேரிக்குடியிருப்பு, அத்தியடித்தட்டு ஆகிய...

வை. வட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்

By Karthik Yash
01 Dec 2025

ஏரல், டிச. 2: வைகுண்டம் வட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மேற்கு மாவட்ட சமூக ஆர்வலர் அன்னை விஜி சரவணன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். வைகுண்டம் வட்டார பகுதி கொட்டியம்மாள்புரம் மணி முருகன் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மேற்கு மாவட்ட சமூக ஆர்வலர் அன்னை விஜி சரவணனை...

விளாத்திகுளத்தில் பொதுமக்களுடன் மார்க்கண்டேயன் எம்எல்ஏ சந்திப்பு

By Karthik Yash
01 Dec 2025

விளாத்திகுளம், டிச. 2:விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மார்க்கண்டேயன், தினமும் தொகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் முடிவுற்ற பணிகளை...