மயங்கி விழுந்த முதியவர் சாவு
போடி, அக். 24: போடி குப்பிநாயக்கன்பட்டி கண்ணப்பர் தெருவை சேர்ந்த சேகர் (61). இவரது மகன் முருகன் (30). கோயமுத்தூர் வடவள்ளியில் தங்கி வேலை செய்து வருகிறார். சேகருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. கடந்த தீபாவளி 20ம் தேதி போடி எம்ஜிஆர் சிலை எதிர்புறம் கடையில் போதையில் மயங்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்....
பட்டாசு வெடித்ததில் தகராறு
வடமதுரை, அக். 24: வடமதுரை அருகே தென்னம்பட்டி சுப்பாகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ராஜ் (65), விவசாயி. இவரது வீட்டின் அருகே கடந்த அக்.20ம் தேதி தீபாவளியன்று அஜித்குமார் (25) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ராஜ் வீட்டில் கட்டி இருந்த 2 பசுமாடுகள் வெடி சத்தத்தில் மிரண்டு கயிற்றை அறுத்து...
தம்பதிக்கு கொலை மிரட்டல்
தேவதானப்பட்டி, அக் 24: தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி தண்ணீர்தொட்டி தெருவைச் சேர்ந்தவர் சுரேஸ்குமார்(45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வம் தரப்பினருக்கும் சொத்து தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியன்று சுரேஸ்குமார் வீட்டில் அன்புச்செல்வன் தரப்பினர் பட்டாசை கொளுத்தி தூக்கி எரிந்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட சுரேஸ்குமாரையும் அவரது மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல்...
பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரியில் இலவச பயிற்சி வகுப்புகள்
தேவதானப்பட்டி, அக். 18: தமிழகத்தின் இளைய தலைமுறை சுயதொழில் சார்ந்த திறனை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திறன்மேம்பாட்டு நிறுவனம் திறன் தமிழ்நாடு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பெரியகுளம் தோட்டக்கல்லூரியில் இலவச காளான் வளர்ப்பு (26 நாட்கள்), நாற்றங்கால் உற்பத்தி (26நாட்கள்) பயிற்சி வரும் அக்.27ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற உள்ளது....
தேவதானப்பட்டி அருகே மூதாட்டியிடம் மூக்குத்தி பறிப்பு
தேவதானப்பட்டி, அக். 18: தேவதானப்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் மணி மனைவி சிட்டம்மாள்(75). இவர் தேவதானப்பட்டி டூ வத்தலக்குண்டு பைபாஸ் சாலை சாத்தாகோவில்பட்டி பிரிவில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இவரது பெட்டிக்கடைக்கடைக்கு டூவீலரில் வந்த 35 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சிகரெட் வாங்கியுள்ளனர். பின்னர் அந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தவாறு முகத்தை பிடித்து...
வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு டார்ச்சர்
போடி, அக். 18: போடி அருகே மீனாட்சிபு ரம் பேரூராட்சியில் உள்ள மண்டையன் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் நிஷாந்தி (24). இவரும் மீனாட்சிபுரம் போடி அருகே துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரமேஷ்ராஜா (33) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ரமேஷ் ராஜாவும், அவரது தந்தை அரசனும் சேர்ந்து நிஷாந்தியிடம் 10 பவுன்...
வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது முல்லையாற்று தடுப்பணையில் குளிக்க அனுமதிக்கக் கூடாது
தேனி, அக். 17: தேனி அருகே வீரபாண்டியில் மாரியம்மன் கோயில் அருகே முல்லைப்பெரியாறு செல்கிறது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 1 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வீரபாண்டி முல்லையாற்றில் தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், வீரபாண்டி வழியாக கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேன், கார்களில் செல்லும் சுற்றுலா பயணிகள்...
மூணாறில் வீட்டின் முன் நின்ற டூவீலருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
மூணாறு, அக். 17: மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பேக்டரி டிவிஷனை பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (23). இவர் நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டின் முன்பு வழக்கம் போல் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது டூவீலர் தீப்பிடித்து...
தேனி அரசு ஐடிஐயில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி
தேனி, அக். 17: தேனியில் உள்ள அரசு ஐடிஐயில் கட்டுமான தொழிலாளர்களுக்கு எலக்ட்ரீசியன் பிரிவில் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. தேனியில் உள்ள அரசு ஐடிஐயில், தமிழ்நாடு கட்டுமான கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆகிய இரு துறைகளுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு...