திருப்பனந்தாள் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

கும்பகோணம், அக்.31: கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பனந்தாள் துணை மின் நிலையத்திலிருந்து நாளை 1ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்தூவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட...

பாலியல் தொழில் நடத்தி வந்த இருவர் கைது

By Ranjith
30 Oct 2025

தஞ்சாவூர், அக்.31: தஞ்சை முனிசிபல் காலனி 5ம் தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி ஆதிசத்யா (31), நாமக்கல் மாவட்டம்...

பூதலூர் அருகே பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

By Ranjith
29 Oct 2025

திருக்காட்டுப்பள்ளி, அக்.30: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் உப்பிலிகுடியை சேர்ந்தவர் காசி(எ)கார்த்திக் மகன் சேகர்(எ)ஜெயராமன் (55). இவர் பூதலூர் அருகே புதுப்பட்டி சூசை கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு செங்கிப்பட்டி -பூதலூர் சாலை புதுப்பட்டி சூசை கோழி பண்ணை அருகே உறவினருடன் பேசிவிட்டு கோழி பண்ணைக்குச் செல்ல சாலையை கடந்த...

பாபநாசம் பேரூராட்சி 9வது வார்டில் சிறப்பு வார்டு சபா கூட்டம்

By Ranjith
29 Oct 2025

தஞ்சாவூர், அக்.30:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 9 வார்டுகளில் சிறப்பு வார்டு சபாக் கூட்டம் காணியாளர் தெரு பிள்ளையார் கோவில் வளாகத்தில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடிநீர் வினியோகம்,...

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

By Ranjith
29 Oct 2025

ஒரத்தநாடு, அக்.30: பட்டுக்கோட்டையை அடுத்துள்ள உதயசூரியபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்துவாட்டாத்திக்கோட்டை போலீசார் அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உதயசூரியபுரம் கடைத்தெரு அருகே கஞ்சாவுடன் விற்பனைக்காக நின்று கொண்டிருந்த அலிவலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் வயது (30) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்....

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நவீன பத்திரப்பதிவு அலுவலகம்

By Arun Kumar
28 Oct 2025

  கும்பகோணம், அக். 29: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள பத்திரப்பதிவு அலுவலகம் எப்போது திறக்கப்படும்? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக கும்பகோணம் அருகே சுவாமிமலையில் குளிரூட்டப்பட்ட மற்றும் லிஃப்ட் வசதியுடன் சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகள் கொண்ட பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது....

திருவிடைமருதூரில் வாய்க்காலை தூர்வாராததால் நெற்பயிர்கள் சேதம்

By Arun Kumar
28 Oct 2025

  திருவிடைமருதூர், அக். 29: திருவிடைமருதூரில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக 200 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டம் எல்லை பகுதியான கடலங்குடி, விளாங்குடி அருகே உள்ள முட்டையான் வாய்க்காலை தூர்வார வேண்டும்....

மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்

By Arun Kumar
28 Oct 2025

  தஞ்சாவூர், அக் 29: குறுவை கொள்முதல் பணிகளில் இன்னமும் சுணக்கம் தான் உள்ளது. அதை விரைவு படுத்த வேண்டும். மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உடன் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்...

கும்பகோணம் பெரிய தெருவில் தமிழ்நாடு கிராம வங்கி 679 வது கிளை திறப்பு

By Arun Kumar
27 Oct 2025

  தஞ்சாவூர்,அக்.28: தமிழ்நாடு கிராம வங்கி தனது 679 வது கிளையை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய தெருவில் நேற்று(27.10.25) துவங்கியது. துணை மேயர் தமிழழகன் மற்றும் வங்கியின் தலைவர் மணி சுப்ரமணியன் ஆகியோர் ரிப்பன் வெட்டி கிளையை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் மணி சுப்ரமணியன், வங்கியின் மண்டல மேலாளர் பிரசாத் ஆகியோர்...

தஞ்சை மாநகராட்சியில் பாதாள சாக்கடை மூடிகளை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும்

By Arun Kumar
27 Oct 2025

  தஞ்சாவூர், அக்.28: தஞ்சை வார்டு எண் 45ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேயர் சண்.ராமநாதன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் 45 வது வார்டில் உள்ள தங்கள் கோரிக்கையான நடராஜபுரம் இரண்டாம் தெருவில் உள்ள...