கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

தஞ்சாவூர், நவ.6: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பெரியார் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜன் (45). இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த 2 மர்மநபர்கள் ரெங்கராஜனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து...

செருவாவிடுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

By Ranjith
05 Nov 2025

பேராவூரணி, நவ.6: பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட செருவாவிடுதி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணியை உதவி கோட்டப்பொறியாளர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர்-சாயல்குடி மாநில சாலையினை பரப்பு அடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் திட்டத்தின் கீழ் இருவழித்தடத்திலிருந்து பல வழித்தடமாக அகலப்படுத்தி தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த...

தஞ்சையில் சட்டவிரோதமாக குட்கா போதைபொருட்கள் கடத்திய இருவர் கைது: 296 கிலோ குட்கா பறிமுதல்

By Ranjith
05 Nov 2025

தஞ்சாவூர், நவ.6: தஞ்சையில் சட்ட விரோதமாக குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 296 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் படி குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் காவலர்கள் மூலம்...

திருக்கனூர்பட்டி பகுதியில் 4 சாலை பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும்

By Ranjith
05 Nov 2025

தஞ்சாவூர், நவ.5: தஞ்சாவூர் அடுத்த திருக்கனூர்பட்டி பகுதியில் நான்கு சாலை பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் திருக்கனூர்பட்டி பகுதி உள்ளது. மேலும் அங்கு 4 சாலை பிரியும் பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக வல்லம்,...

ஒரத்தநாடு சாலையோரங்களில் மணல் குவியல் அகற்றும் பணிகள் தீவிரம்

By Ranjith
05 Nov 2025

ஒரத்தநாடு, நவ.5: ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் மையத்தடுப்பு ஓரங்களில் படிந்துள்ள மண்குவியலை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலையான திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி- பட்டுக்கோட்டை சாலையில் திருவோணம் ஊரணிபுரம் போன்ற பிரதான நகரங்கள் உள்ளன. இப்பகுதியில், திரு வோணம் முதல் ஊரணிபுரம் வரை சாலையில் மைய தடுப்பு...

கொன்றைக்காடு அரசு பள்ளி மாணவர்கள் மாநில கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க தகுதி

By Ranjith
05 Nov 2025

பேராவூரணி, நவ.5: பேராவூரணி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டியில் முதலிடம் பெற்று, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி பவதாரணி செவ்வியல் இசை பாட்டில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், மாணவர் பிரகநீலன் களிமண் சிற்பம் வடிவமைப்பதில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்....

தேசிய மாணவர் படையின் சார்பில் தஞ்சையில் தேசிய ஒருமைப்பாட்டு பேரணி

By Ranjith
31 Oct 2025

தஞ்சாவூர், நவ.1: தஞ்சையில் தேசிய மாணவர் படையின் சார்பில் தேசிய ஒருமைப்பா ட்டு பேரணி நடைபெற்றது. தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி என்சிசி மாணவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட தேசிய மாணவர்படை மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி சரபோஜி கல்லூரியில் துவங்கி ஆர்.ஆர்.நகர், ஓல்ட் ஹவுஸிங் யூனிட் வழியாக மீண்டும் மன்னர் சரபோஜி...

பனைவிதை நடும் பணி

By Ranjith
31 Oct 2025

திருவையாறு, நவ.1: திருவையாறு அருகே மேலதிருப்பூந்துருத்தி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் 500 பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜான் மனோகர் உதவி திட்ட அலுவலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பள்ளி...

இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரசார் மரியாதை

By Ranjith
31 Oct 2025

தஞ்சாவூர், நவ.1: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மிஷின் தெருவில் உள்ள இந்திராகாந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன் தலைமை வகித்தார். இந்திராகாந்தி சிலை க்கு ஒரத்தநாடு வட்டாரத் தலைவர் சுரேஷ்...

ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

By Ranjith
30 Oct 2025

திருக்காட்டுப்பள்ளி, அக்.31: திருக்காட்டுப்பள்ளி அருகே பூதலூர் ரயில் நிலையத்தில் ரயில்முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வசிக்கும் அக்கீம் என்பவரது மனைவி வர்ஜுனா (33). இவர் நேற்று மாலை பூதலூர் ரயில் நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது, மாலை...