அழகு மயில் ஆட... புதுப்பட்டினம் கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு
தஞ்சாவூர், ஜீலை 21: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களுடன் இணைந்து உறுதி மொழியும் ஏற்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரையில் மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள்,...
தஞ்சையில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூர், ஜுலை 20: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதிகளில் தொலைந்து போன 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களிடமிருந்து திருடப்பட்ட மற்றும் தொலைந்து...
ஒரத்தநாடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஒரத்தநாடு, ஜூலை 20: ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பொய்யுண்டாகோட்டை, பாச்சூர், ஆதனக்கோட்டை, கருக்காடிபட்டி ஆகிய ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திருவையாறு எம்எல்ஏ துரைசந்திரசேகரன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும்,...
தஞ்சாவூர் தேசிய கல்விக்கொள்கை எனும் மத யானை தமிழகத்தை சீரழித்து விடும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
தஞ்சாவூர், ஜுலை 20: தஞ்சை கலைஞர் நூலக வாசகர் வட்டம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக்கொள்கை 2020 என்னும் மதயானை நூல் திறனாய்வுக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வரவேற்றார். உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும்...
தஞ்சை மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஜுலை 19: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள...
திருவையாறு அருகே நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருவையாறு, ஜூலை 19: திருவையாறு அருகே கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனம் சார்பில் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக தலைவர் உதவி பேராசிரியர் சரவணன், ஏழை பெண்கள் 10 பேருக்கு பால் கறவைமாடும், 50 பெண்களுக்கு தையல் மிஷின்களும், கோயில்கள் உழவாரப்பணிக்கு நிதி உட்பட 10...
ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி
தஞ்சாவூர், ஜூலை 19: இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும்...
பட்டுக்கோட்டை பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
பட்டுக்கோட்டை, ஜூலை 18: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை நகரப் பகுதியான மேலத்தெரு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி நடந்தது. இந்த பணியில் உயர்கல்வித்துறை அமைச்சர்...
தஞ்சை வண்டிக்கார தெரு மேம்பாலம் அருகே சாலையோர தள்ளுவண்டி கடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சாவூர், ஜுலை 18: தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக நகரை அழகாகவும், தூய்மையாகவும் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு நகரின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும். அதிலும், குறிப்பாக பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம்,...