திருமங்கலக்கோட்டையில் தார் சாலை வேண்டும்

தஞ்சாவூர், நவ. 19: ஒரத்தநாடு தாலுகா திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருமங்கலக்கோட்டை பகுதி மயானத்திற்குச் செல்லும் மண் சாலையை, தார் சாலையாக மாற்றி மின்விளக்கு வசதி அமைத்து தர வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள இச்சாலை மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால்...

தஞ்சையில் பரிதாபம்; மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் பலி: போலீசார் விசாரணை

By Ranjith
18 Nov 2025

வல்லம், நவ. 19: தஞ்சையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். தஞ்சை விளார் சாலை காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பிரவீன்ராஜ்(20). திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த இவர் நேற்று முன்தினம் 17ம் தேதி அதிகாலை தனது...

தஞ்சையில் இருந்து பொள்ளாச்சிக்கு 1000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு: ரயில் வேகன் மூலம் சென்றது

By Neethimaan
17 Nov 2025

  தஞ்சாவூர், நவ. 18: தஞ்சையில் இருந்து பொள்ளாச்சிக்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள்...

பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

By Neethimaan
17 Nov 2025

  பட்டுக்கோட்டை, நவ. 18: பட்டுக்கோட்டை பள்ளியில் வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் எஸ்ஐஆர் சிறப்பு திருத்த முகாம் 2 நாட்கள் நடந்தது. முகாமில் வாக்குச்சாவடி நிலை...

தேர்தல் ஆணையத்தை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு

By Neethimaan
17 Nov 2025

  பேராவூரணி, நவ. 18: தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) பணிகளில் ஊழியர்களுக்கு நெருக்கடியை அளிக்கும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயதுரை தலைமை வகித்தார்....

தஞ்சை மாவட்டத்தில் 19,222 மாணவர்களுக்கு ரூ.9.26 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள்

By MuthuKumar
15 Nov 2025

தஞ்சாவூர், நவ.15: தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துணைமுதல்வர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தஞ்சாவூர்...

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டின் பாசன உரிமை முற்றிலும் பறிக்கப்படும்

By MuthuKumar
15 Nov 2025

தஞ்சாவூர், நவ.15: மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டின் பாசன உரிமை முற்றிலும் பறிக்கப்படுவதுடன் காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தொடர்ந்து கர்நாடக அரசு...

திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாக்குச்சாவடி முகவர்கள் பணி மிக முக்கியமானது

By MuthuKumar
15 Nov 2025

திருவிடைமருதூர், நவ.15: தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) மற்றும் இளைஞரணி பாக முகர்வர்கள் பயிற்சி கூட்டம் சாரதா மஹாலில் நடைபெற்றது. இப்பயிற்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். தஞ்சாவூர் வடக்கு...

தஞ்சையின் இருவேறு பகுதியில் ஸ்கூட்டி, பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

By Ranjith
12 Nov 2025

வல்லம், நவ.13: தஞ்சையின் இருவேறு பகுதிகளில் ஸ்கூட்டி, பைக் ஆகியவற்றை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாரியம்மன்கோவில் ஜெயஸ்ரீ நகரை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (49). இவர் நேற்று தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு சென்றிருந்தார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல...

திருக்காட்டுப்பள்ளியில் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

By Ranjith
12 Nov 2025

திருக்காட்டுப்பள்ளி, நவ.13: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி புது ஆற்றுப்பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றி போலீஸில் ஒப்படைத்தனர். திருக்காட்டுப்பள்ளி அருகே கருப்பூர் அம்பலகார தெருவை சேர்ந்தவர் குணா மனைவி சந்தியா (27). இவரது கணவர் வாழை இலை அறுக்கும் தொழிலாளி. 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன...