தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 803 மி.மீ மழை பதிவு: 13 வீடுகள் சேதம்;3 கால்நடைகள் இறந்தன
தஞ்சாவூர், அக்.23: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் இடைவிடாமல் பெய்து வருகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு பெய்ய தொடங்கிய கனமழை நேற்று முன்தினம் பகல் முழுவதும் இடைவிடாமல் கொட்டியது. இரவிலும் விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று...
ராஜராஜசோழன் சதயவிழா கணக்கீட்டை திருத்த வேண்டும் சோழ மண்டல இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், அக்.23:ராஜராஜசோழன் சதய விழா கணக்கீட்டை திருத்தக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சோழமண்டல இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜாராஜசோழன் சதய விழா தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா வருகிற 31 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது. இந்த சதய விழா 1040-வது சதய விழா என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதய...
விபத்தில்லா தீபாவளியை கொண்டாட அரசு பள்ளி மாணவிகளுக்கு தீயணைப்புத்துறையினர் பயிற்சி
தஞ்சாவூர், அக்.18: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விபத்து இல்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப்...
தஞ்சாவூர் ரயில்வே குட்செட்டில் குண்டும், குழியுமாக உள்ள சிமெண்ட் சாலை: சீர் செய்ய கோரிக்கை
தஞ்சாவூர், அக் 18: தஞ்சாவூர் ரயில்வே குட்செட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் குட்செட்டு உள்ளது. இந்த குட்செட் மூலம் அரிசி நெல் மூட்டைகள் லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் லாரிகளிலிருந்து வேகன்களுக்கு அரிசி மூட்டை ஏற்றுவதற்காக தஞ்சை குட்செட்டில்...
போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவையாறு, அக்.18: திருவையாறு அரசர் கல்லூரியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விரிவான அறிவை மேம்படுத்திடவும் இளம் பருவ ஆரோக்கியம் மன ஆரோக்கியம் மற்றும் போதை தடுப்பு தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர்...
திருவையாறு அரசு முழுநேர கிளை நூலகத்தில் வாசகர் கூட்டம்
திருவையாறு, அக்.17: திருவையாறு அரசு முழுநேர கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் 2ம் நிலை நூலகர் காமராஜ் ஆலோசனை வழங்கி பேசினார். இதில் நூலக பணியாளர் சாந்தவதனி,போட்டி தேர்வு மாணவர்கள் தியாகராஜன், மணிகண்டன், பிரவீன்குமார், ராஜேஷ், அஸ்வின் மற்றும் வாசகர்கள் ஏராளமானோர் கலந்து...
கூட்டுறவு நகர வங்கி பொது பேரவைக்கூட்டம்
தஞ்சாவூர், அக்.17: தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடி திராவிட கூட்டுறவு நகர வங்கியின் 106வது பொதுப்பேரவைக் கூட்டம் கடந்த 14.10.2025 செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டம் வங்கியின் கூட்டுறவு சார்பதிவாளர்/செயலாட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வங்கியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ‘அ’ வகுப்பு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். உறுப்பினர்களுக்கு 14% பங்கு ஈவுத்தொகையாக ரூ.15,50,125/- வழங்கப்பட்டது. ...
பூதலூர் மேம்பாலத்தில் தேங்கும் மழைநீரால் பாலத்திற்கு ஆபத்து
திருக்காட்டுப்பள்ளி, அக்.17: திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டி சாலையில் பூதலூரில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில், நாள்தோறும் இருசக்கர வாகனம், பஸ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், தற்போது பருவமழை பெய்ய ஆரம்பித்து விட்டதால், இந்த உயர் மட்டப்பாலத்தின் மேல்பகுதியில் மழைநீர் தேங்கி பல்வேறு இடங்களில்...
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு துறையில் இ.ஆட்டோ வாங்க கடன் பெற அழைப்பு
தஞ்சாவூர்,அக்.14: தஞ்சாவூர் மாவட்டத்தில் பின் தங்கிய மகளிர்கள் இ.ஆட்டோ வாங்க கடன் அளிக்கப்படுகிறது என்று கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் 2025-26 நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு ரூ.3 லட்சம் வரை மின்சார பேட்டரியில் இயங்கும்...