தஞ்சையில் சுகாதார சீர்கேட்டில் சிக்கித்தவிக்கும் மீன் சந்தை
தஞ்சாவூர், நவ.28: தஞ்சாவூர் மீன் மொத்த விற்பனை சந்தை சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தஞ்சை மாநகராட்சி கொடிமரத்து மூலைப்பகுதி அகழியையொட்டி மீன் மொத்த வியாபார சந்தை அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இச்சந்தையின் பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சந்தைக்கு அதிகாலை 2 மணி...
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல் ஓவியத்தில் சிறந்து விளங்கிய தஞ்சை பெண்ணுக்கு பூம்புகார் விருது
தஞ்சாவூர், நவ.28: தஞ்சை ஓவியத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கு பூம்புகார் விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கி கெளரவித்தார். தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கான பூம்புகார் விருதுகள் மாமல்லபுரத்தில் வழங்கப்பட்டன. இவ்விருதுக்கு தஞ்சாவூரை சேர்ந்த விஜயசக்தி அறிவானந்தம் (25) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு, தஞ்சை ஓவியத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கான...
ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சையில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், நவ.28: தஞ்சையில் ஒன்றிய அரசை கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிமண்டபம் அருகே உள்ள தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல் தலைமை வகித்தார். அப்போது, மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப...
பூதலூர் வட்டம் சானூரப்பட்டி கால்நடை மருந்தக வளாகத்தை சீர்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருக்காட்டுப்பள்ளி, நவ.27: தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் சானூரப்பட்டி கால்நடை மருந்தக வளாகத்தை சீர்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சானூரப்பட்டி கால்நடை மருந்தகம் அப்பகுதியில் உள்ள சுமார் 25 கிராம கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இங்கு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அடிக்கடி வந்து செல்லும்...
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
தஞ்சாவூர், நவ.27: தஞ்சையில் மோட்டார் சைக்கிளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஈசன் விடுதி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவர், நேற்று முன்தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். அப்போது, தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனை...
ஜெருசலேம் புனித பயணம்; கிறிஸ்தவர்கள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தஞ்சாவூர், நவ.27: தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம்...
நெதர்லாந்து சுற்றுலா பயணிகள் தென்னிந்தியா முழுவதும் சைக்கிள் பயணம்
தஞ்சாவூர், நவ 26: தெதர்லாந்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தென்னிந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுலா மேற்கொள்ள, தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து தங்களது பயணத்தை நேற்று தொடங்கினர். நெதர்லாந்த் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று தஞ்சாவூர் வந்தனர். இதில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் சைக்கிளில்...
பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தஞ்சாவூர், நவ.26: தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி, இளம் நெல் நடவு பயிருக்கு உரிய நிவாரண நிதி வழங்க தமிழக அரசை நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை...
திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் 4 புதிய நகர பேருந்துகள் சேவை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்
திருவிடைமருதூர், நவ.26: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 4 புதிய நகர பேருந்துகள் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம்-1 கிளை சார்பில் கும்பகோணத்திலிருந்து கோமல், நெய்வாசல், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறைக்கும், நாகை மண்டலம் சார்பில் மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் வரை செல்லும்...