அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம்

கமுதி, ஜூன் 4: கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வருடா வருடம் ஜூன் மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட தேர்த்திருவிழா நேற்று காலை...

கலைஞர் பிறந்த நாள் திமுகவினர் கொண்டாட்டம்

By Neethimaan
03 Jun 2025

திருப்புவனம், ஜூன் 4: திருப்புவனம் பகுதியில் நேற்று கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அச்சங்குளம் முருகன் தலைமையில் திமுகவினர், திருப்புவனம் மெயின் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பாக பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கும், பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர். பூவந்தியில் திமுக கிழக்கு ஒன்றிய...

மரத்தில் மோதிய சரக்கு வேன்

By Neethimaan
03 Jun 2025

திருவாடானை, ஜூன் 4: கேரளாவில் மீன்களை இறக்கி விட்டு நாகப்பட்டிணம் நோக்கி சரக்கு வேன் சென்றது. நேற்று அதிகாலை திருவாடானை அருகே தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் பகுதியில் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர வேப்ப மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவரான...

சிவகங்கை அரசு கல்லூரியில் சேர 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

By Neethimaan
02 Jun 2025

சிவகங்கை, ஜூன் 3: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் சேர 22 ஆயிரத்து 55பேர் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் இரண்டு சுழற்சிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். முதல்நிலை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்ட இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளியல், கணிப்பொறி அறிவியல் உள்ளிட்ட...

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சிந்தனைகள் செயலாகி சாதனையாகிறது: முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேச்சு

By Neethimaan
02 Jun 2025

காரைக்குடி, ஜூன் 3: காரைக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழிகாட்டுதலின்படி கோடை காலத்தை முன்னிட்டு திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நீர், மோர் பந்தல் துவங்கப்பட்டு 50ம் நாள் விழா நடந்தது. மாவட்ட கலை இலக்கிய பேரவை துணைத்தலைவர் காரை சுரேஷ் வரவேற்றார். மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை தலைமை...

சிறுபான்மை மக்களுக்கு திமுக அரணாக உள்ளது: நவாஸ்கனி எம்பி பேட்டி

By Neethimaan
02 Jun 2025

காரைக்குடி, ஜூன் 3: காரைக்குடியில் ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வக்பு வாரிய சேர்மன் நவாஸ்கனி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘காரைக்குடியில் உள்ள ஐக்கிய ஜமாத் நிர்வாகம் 9 பள்ளிவாசல் நிர்வாகிகளால் தேர்வு செய்யப்படும். இந்த 9 பள்ளிவாசல்களையும் ஆய்வு செய்து விட்டு புதிய ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக...

சாலை விபத்தில் இளைஞர் பலி

By Ranjith
01 Jun 2025

  சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குறிச்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (38). இவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனது உறவினரோடு அணைக்கரைப்பட்டி சாலையில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அணைக்கரைப்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த சிவச்சந்திரன் (18) என்பவர், ஓட்டி வந்த டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து செந்தில்குமார் மீது மோதியது. இதில் இருவரும்...

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் தேருக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

By Ranjith
01 Jun 2025

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர்சுவாமி கோயிலில் வைகாசி விசாகப்பெருந் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டத்திற்காக, தேர்கள் வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் வைகாசிப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்தாண்டு வைகாசி பெருவிழாவிற்காக நேற்று முன் தினம் கோயிலில் கொடியேற்றப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது....

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By Ranjith
01 Jun 2025

  சிவகங்கை: மகளிருக்கான கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஏதேனும் ஒரு துறையில் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம். விருதுடன், ரூ.5,00,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படும். விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக...

சிவகங்கையில் இன்று திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

By Ranjith
29 May 2025

சிவகங்கை, மே 30: சிவகங்கையில் இன்று திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுக மாவட்ட செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில்: ‘‘திமுக சிவகங்கை மாவட்ட கழக செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சிவகங்கை ராயல் மகாலில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் கணேசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்....