சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை, செப். 27: இளையான்குடியில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியினால் ஏற்படும் பயன்கள், போதை பழக்கத்தை பழகாமல்...

நவராத்திரி விழா

By Karthik Yash
26 Sep 2025

திருப்புத்தூர், செப். 27: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் நேற்று நவராத்திரி கலை விழா நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் கொலு பொம்மைகள் 9 படிகளாக அடுக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றது. நேற்று கொலு பொம்மைகளுக்கு தீர்த்த கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு பள்ளி மாணவி ஷிவானி குத்துவிளக்கேற்ற நெய்வேத்தியம்...

9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம்

By Karthik Yash
25 Sep 2025

சிங்கம்புணரி, செப்.26: சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் துறையினரின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்திற்கு வருவாய்த் துறையினர் கூட்டமைப்பு மாவட்டத் துணைத் தலைவர் தாசில்தார் நாகநாதன் தலைமை வகித்தார். இதில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் களப்பணி மற்றும் மனுக்களின் மீதான பரிசீலனைக்கு கால அவகாசம் வேண்டும். ஜூலை 1ம் தேதி...

பெருமாள் கோயில் நந்தவனத்தில் 200 செடிகள் நடும் விழா

By Karthik Yash
25 Sep 2025

சிங்கம்புணரி, செப்.26:சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலை உடனான சேவகபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள நந்தவனம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்டது. நந்தவனத்தை பராமரிக்கும் விதமாக சேவகப் பெருமாள் ஆண்டார் அறக்கட்டளை சார்பாக பலவகை பூச் செடிகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னால் எம்எல்ஏ அருணகிரி தலைமை வகித்தார்....

தேவகோட்டையில் எச்ஐவி விழிப்புணர்வு பிரசாரம்

By Karthik Yash
25 Sep 2025

தேவகோட்டை, செப்.26: தேவகோட்டை வட்டாரத்தில் தீவிர எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு தீவிர பிரசாரம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அழகு தாஸ்,மருத்துவ அலுவலர் அப்துல் பைசில் ஆகியோர் தலைமையில் நடந்தது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மேற்பார்வையாளர் வாருணி தேவி முன்னிலை வகித்தார். இதில் திருவேகம்பத்தூர் மற்றும்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை அறிமுகம்

By Ranjith
24 Sep 2025

திருவாடானை, செப்.25: திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக புதிய வண்ண சீருடை வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாடானை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 63 மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் புதிய வண்ண சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு...

வேதாளை அருகே சிறப்பு முகாமில் குவிந்த மனுக்கள்

By Ranjith
24 Sep 2025

மண்டபம்,செப்.25: மண்டபம் அருகே வேதாளை, மரைக்காயர் பட்டிணம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். மண்டபம் வேதாளை மற்றும் மறைக்காயர்பட்டிணம் ஊராட்சி பகுதிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் வேதாளை அருகே இடையர் வலசை பகுதியில் நடைபெற்றது. முகாமினை மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோமசுந்தரம்...

மண்டபத்தில் மீனவர் தற்கொலை

By Ranjith
24 Sep 2025

மண்டபம்,செப்.25: மண்டபம் பேரூராட்சி பூங்கா அருகே காளியம்மன் கோவிலுக்கு எதிரே காட்டுக்குள் மரத்தில் ஒருவர் தூக்கிலிட்டு கிடப்பதாக மண்டபம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. போலீசார் சென்று உடலை மீட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பாம்பன் புயல்...

பணி நிரந்தரம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் கைது

By Arun Kumar
23 Sep 2025

  ராமநாதபுரம், செப்.24: ராமநாதபுரத்தில் பணி நிரந்தரம் கோரி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 90 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்பகிர்மானம், அனல், புனல் மற்றும் பொது கட்டுமான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த...

அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

By Arun Kumar
23 Sep 2025

  தொண்டி, செப்.24: நவராத்திரி விழா தொண்டி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று முன்தினம் இரவு காமாட்சி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து முப்பெரும் தேவியர், முருகன், ராகவேந்திரர், சாய்பாபா உள்ளிட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வணங்கி சென்றனர். ஒன்பது நாளும்...