ஊட்டி காந்தல் பிரதான சாலை சீரமைப்பு
ஊட்டி, செப். 18: ஊட்டி காந்தல் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின் சாலை சீரமைக்கப்படும் நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு காந்தல் பகுதியில் உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த ஒரு தேவைகளுக்கும் ஊட்டி நகருக்கு வந்துச் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், காந்தல்...
போதைப்பொருள் விற்ற 6 பேர் கைது
பாலக்காடு, செப்.17: ஒத்தப்பாலம் தாலுகா பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஒத்தப்பாலம் போலீசாரும், போதை தடுப்புப்பிரிவு போலீசாரும் ஒத்தப்பாலம் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஒத்தப்பாலம் தெற்கு பனமண்ணா அருகே கண்ணியம்புரம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து 6 பேர் சட்டவிரோதமாக பட்டாசுகள்...
வாகனங்களை வழிமறித்த கபாலி காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அச்சம்
பாலக்காடு, செப்.17: கேரள மாநிலம் அதிரப்பள்ளி-மலக்கப்பாறை சாலையில் கபாலி என்ற காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். திருச்சூர் மாவட்டம் சாலக்குடி வழியாக அதிரப்பள்ளி, மலக்கப்பாறை மற்றும் வால்பாறை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர். காட்டு வழி சாலையில் அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது....
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஊட்டி, செப்.17: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பார்க் அருகே அமைந்துள்ள குன்னூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர்...
அதிமுக சார்பில் மஞ்சூரில் அண்ணா பிறந்தநாள் விழா
மஞ்சூர், செப்.16: மஞ்சூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் குந்தா கிழக்கு ஒன்றியம் கீழ்குந்தா பேரூராட்சி அதிமுக சார்பில் மஞ்சூரில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பேரூராட்சி செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். அவை தலைவர் துரைசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் கோபாலன்,...
மளிகை கடையில் தீ விபத்து மூதாட்டி கயிறு கட்டி மீட்பு
பாலக்காடு, செப்.16: பாலக்காடு மாவட்டம் பட்டஞ்சேரியில் மளிகை கடையில் தீப்பிடித்து பொருட்கள் நாசமடைந்தன. பாலக்காடு மாவட்டம் வண்டித்தாவளம் அருகே பட்டஞ்சேரியில் கிஷோர் (45) மளிகை கடை நடத்தி வருகின்றார். கடையின் மேல் மாடியில் தாய் ராஜாலட்சுமி மற்றும் மகன் கிஷோர் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பொள்ளாச்சிக்கு மளிகை பொருள்...
நடுவட்டம் பேரூர் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
கூடலூர், செப்.16: நடுவட்டம் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் செயலாளர் காவே உதயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ராமநாதன், மாவட்ட பிரதிநிதி குமார்தாஸ், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் விக்டர்பால், பேரூராட்சி தலைவர் கலியமூர்த்தி, துணைத்தலைவர் துளசி...
நெல்லியாளம் நகர பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்
பந்தலூர்,செப்.15: பந்தலூர் ப்யூச்சர் மஹால் திருமண மண்டபத்தில் நெல்லியாளம் நகர பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கூடலூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் பரமேஸ்குமார் கலந்து கொண்டு பாகநிலை முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ மற்றும் தலைமை கழக...
மிலாடி நபி ஊர்வலத்திற்கு இந்து கோயில் கமிட்டியினர் வரவேற்பு
கூடலூர், செப்.15: கூடலூர் பஜாரில் நடைபெற்ற மிலாடி நபி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இந்து கோயில் கமிட்டி அமைப்பினர் இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர். கூடலூர் பெரிய பள்ளிவாசல் கமிட்டி தலைவர் உன்னி மைதீன் தலைமையில் பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்து மிலாடி நபி ஊர்வலம் துவங்கியது. பழைய பேருந்து நிலையம் வழியாக சுங்கம் ரவுண்டனா...