உள்வீரராக்கியம் ஏரிக்கான வாய்க்காலை தூர்வாராததால் தேங்கி நிற்கும் மழைநீர்

  கரூர், டிச.2: உள்வீரராக்கியம் ஏரிக்கான வடிகால் வாய்க்காலை தூர்வாரததால் மழை நீர் தேங்கி நிற்பதையடுத்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கருர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியின் வழியாக லிங்கத்தூர் பகுதியை ஒட்டி உள்வீரராக்கியம் ஏரிக்கான வரத்து வாய்க்கால் செல்கிறது. வெள்ளியணை பகுதியில் ஆரம்பித்து, உள் வீரராக்கியம் வரை இந்த வரத்து வாய்க்கால் பரந்து...

நகர சாலை வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும்

By Arun Kumar
01 Dec 2025

  கரூர்,டிச.2: கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர் உட்பட பல்வேறு உட்புற தெரு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில பகுதிகளில் அதன் மீது வர்ணம் பூசாத காணரத்தினால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வர்ணம் பூசப்படாத வேகத்தடைகளில் வேகமாக சென்று விபத்துக்கும் உள்ளாகி வருகின்றனர்....

கரூர்- வாங்கல் இடையே சாலையோரத்தில் கொட்டப்படும் கோழி கழிவுகள்

By Ranjith
29 Nov 2025

கரூர், நவ. 29: கரூர்- வாங்கல் சாலையோரம் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும்,...

கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் அபேட் மருந்து தெளிக்க வேண்டும்

By Ranjith
29 Nov 2025

கரூர், நவ. 29: கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் வீடுகள் தோறும் அபேட் மருந்து தெளிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாநகராட்சியில் தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர், வேலுசாமிபுரம், பசுபதிபாளையம், வெங்ககல்பட்டி, இனாம்கரூர் போன்ற பல்வேறு பகுதிகள் புறநகர்ப்பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்...

பாதசாரிகளை அச்சுறுத்தும் திறந்து கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால்

By Ranjith
29 Nov 2025

கரூர், நவ. 29: கரூர் காந்திகிராமம் சாலையோரம் பாதசாரிகளை அச்சுறுத்தும் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் வடிகால்களை மூடி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் காந்திகிராமம் வழியாக செல்கிறது. தெரசா கார்னர் பகுதியில் இருந்து ரயில்வே மேம்பாலம் வரை காந்திகிராமம் பகுதியின்...

கரூர் அருகே குட்காவிற்றவர் மீது வழக்கு பதிவு

By MuthuKumar
27 Nov 2025

கரூர், நவ. 28: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பிரிவு அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பிரிவு அருகே குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், நடத்திய...

நவம்பர் 30ம் தேதி மாவட்ட அளவிலான தடகள போட்டி

By MuthuKumar
27 Nov 2025

கரூர், நவ. 28: கரூர் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டி நவம்பர் 30ம் தேதி தான்தோன்றிமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மாணவிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் செல்வம் மற்றும் தடகள சங்க செயலாளர் பெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: இந்திய தடகள சம்மேளனம்...

கரூர் மாவட்டத்தில் நடப்பு பருவ சம்பா பயிர் காப்பீடு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

By MuthuKumar
27 Nov 2025

கரூர், நவ. 28: கரூர் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டின் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30ம்தேதி வரை அவகாசம் அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டின் பிரதம மந்திரியின்...

சாலை அமைக்கக்கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

By MuthuKumar
26 Nov 2025

கிருஷ்ணராயபுரம், நவ. 27: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை மணி நகர் பொதுமக்கள் சாலை வசதி அமைத்து தர வேண்டி முற்றுகையிட்டனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மணி நகரில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை வசதி அமைத்து தர வேண்டி...

கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் ஊரக திறனாய்வு தேர்வு பயிற்சி

By MuthuKumar
26 Nov 2025

கிருஷ்ணராயபுரம், நவ. 26: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு பயிற்சியளிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் ஊரகத்திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 9ம் வகுப்பு...