கிராம ஊராட்சி செயலாளர் பணியிடம்
கரூர், அக். 10: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இணையதள வழியாக...
லாலாபேட்டை பகுதியில் மழையால் செழித்து வளர்ந்துள்ள எள் செடிகள்
லாலாபேட்டை அக். 9: லாலாபேட்டை பகுதிகளில் மானாவரி பயிரான எள் செடிகள் நன்கு பூ பூத்து வளர்ந்துள்ளது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே பஞ்சப்பட்டி, பாப்பாக்காப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, குள்ளம்பட்டி, கட்டாரிப்பட்டி, வயலூர், வரகூர், வீரியம்பாளையம் பகுதிகளில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிலம் உழவு செய்யப்பட்டு எள் விதைகள் தூவப்பட்டது....
காவல்துறை தீவிர ஏற்பாடு தேசிய தொழிலாளர் கொள்கையை வெளியிடகோரி ஏஐடியூசி மாவட்டக் குழு ஆர்ப்பாட்டம்
கரூர், அக்.9: தேசிய தொழிலாளர் கொள்கையை வெளியிடக்கோரி கரூரில் ஏஐடியுசி மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேசிய தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி கரூர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி கரூர் மாவட்டகுழு...
21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல் சின்னதாராபுரம் அரசு மகளிர் பள்ளியில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்
அரவக்குறிச்சி, அக்.9: சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 7 நாட்களாக நடைபெற்றது. இம்முகாமில் திட்ட அலுவலர் லீலாவதி தலைமையில்...
தோகைமலை அருகே மதுபானங்கள் பதுக்கிவிற்பனை
கடவூர், அக். 8: மதுபானங்களை பதுக்கி விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கல்லடை மெய்காப்பன். இவரது மகன் முத்து(எ)முத்துச்சாமி (67). இவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை விற்பனை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்த தோகைமலை போலீசார் விரைந்து சென்று விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த...
கிருஷ்ணராயபுரம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம், அக். 8: கிருஷ்ணராயபுரம் அடுத்த வெள்ளப்பட்டி ஊராட்சியில் சாலை ஓரங்களில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பின் கரூர் கோட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம், மற்றும் பிரிவு, வெள்ளப்பட்டி ஊராட்சி பள்ளத்துப்பட்டி கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட முக்கிய சாலையான மகாதானபுரம் -மைலம்பட்டி...
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூர், அக். 8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மண்டலம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் கோவை சாலையில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்புள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்வக்குமார், அழகேசன், முருகேசன்,...
குளித்தலை ஊராட்சிகளுக்கு ரூ.35.42லட்சம் மதிப்பில் 14 பேட்டரி வண்டிகள்
கிருஷ்ணராயபுரம், அக்.7: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளுக்கு ரூ.35 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 14 பேட்டரி வண்டிகளை எம்எல்ஏ மாணிக்கம், வழங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) பகுதி-2 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்...
மாநில அளவிலான ஓபன் சிலம்பப் போட்டி குளித்தலை பள்ளி மாணவர்கள் சாதனை
குளித்தலை, அக். 7: மாநில அளவிலான ஓப்பன் சிலம்பப் போட்டி திருச்சி மாவட்டம் ரங்கத்தில் நடைபெற்றது, அதில் கரூர் மாவட்டம் குளித்தலை வீரக்கலை சிலம்பம் கலைக்கூடம் பயிற்சி பள்ளியின் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். தனித்திறமை போட்டியில் 6 பேர் முதலிடமும் 6 பேர் இரண்டாம் இடமும் 8 பேர் மூன்றாம் இடமும் வெற்றி...