செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு, அக்.26: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 31ம் தேதி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம்...

வடகிழக்கு பருவமழை தீவிரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 62 ஏரிகள் நிரம்பின

By Karthik Yash
24 Oct 2025

காஞ்சிபுரம், அக்.25: வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 62 ஏரிகள் நிரம்பியுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்ன உருவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு கனமழை மற்றும் மிதமான...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கின:  விவசாயிகள் வேதனை  உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

By Karthik Yash
24 Oct 2025

காஞ்சிபுரம், அக்.25: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

பெற்றோரை திட்டியதை கண்டித்த மகன் மீது தாக்குதல் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

By Karthik Yash
24 Oct 2025

சோழிங்கநல்லூர், அக்.25: வியாசர்பாடி மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது பெற்றோர் இந்திரகுமார், வள்ளி ஆகியோர் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இரவு வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இருதயநாதன் (28) சுதர்சனின் பெற்றோரிடம்,...

31 கிமீ நீளத்திற்கு இட ஆய்வுப்பணி நிறைவு தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.713.56 கோடியில் 4வது ரயில் பாதை: ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

By Karthik Yash
23 Oct 2025

தாம்பரம், அக்.24: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரூ.713.56 கோடியில் 4வது ரயில் வழித்தடம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சுமார் 60 கிலோ மீட்டர் நீளம் உள்ள வழித்தடத்தில் தினசரி 4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதில், சென்னை கடற்கரை - தாம்பரம்...

பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை?: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

By Karthik Yash
23 Oct 2025

காஞ்சிபுரம், அக்.24: காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட ஒலிமுகமதுபேட்டை பகுதியில் செயல்படும் எச்பி பெட்ரோலியத்தின் தனியார் ஏஜென்சீஸில் நேற்று வாடிக்கையாளர்கள் பலர் பெட்ரோல் நிரப்பினர். அப்போது பலரது வாகனங்கள் ஆங்காங்கே அடைத்தபடி நின்றிருக்கிறது. இதில் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை, வரதப்பன் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், இரண்டரை லிட்டர் பெட்ரோல் போட்டுச் சென்ற நிலையில், அவரது பைக்கும் அடைத்தபடி...

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் விஏஓ அதிரடி கைது

By Karthik Yash
23 Oct 2025

பல்லாவரம், அக்.24: பல்லாவரம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 3வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மேகலா தேவி. இவர், சமீபத்தில் திருநீர்மலை பகுதியில் இடம் ஒன்றை வாங்கி, அதனை தனது...

ெதாடர் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: 71 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியது

By Karthik Yash
22 Oct 2025

காஞ்சிபுரம், அக்.23: வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3, 4 நாட்களாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. மழையின்...

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வெள்ள தடுப்பு பணி தீவிரம்: கலெக்டர் ஆய்வு

By Karthik Yash
22 Oct 2025

கூடுவாஞ்சேரி, அக்.23: தமிழகத்தில் தற்போது வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் விட்டுவிட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், உதயசூரியன் நகர், பகுதிகளில் உள்ள உபரி நீர், வடிநீர் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் சினேகா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு...

தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருவதால் வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் பறவைகள் வரத்து அதிகரிப்பு: பராமரிப்பு பணிகள் தீவிரம்

By Karthik Yash
22 Oct 2025

மதுராந்தகம், அக்.23: தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருவதால் வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை,...