மஞ்சள் பயிருக்கு மருந்தடிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி, நவ.5: தர்மபுரி மாவட்டத்தில் எம்.ஒட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிட்டுள்ள மஞ்சள் செடிகளுக்கு களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாரங்களில், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தர்மபுரி தாலுகாவிற்கு உட்பட்ட...

கால்நடை தீவன கடை உரிமையாளர் தற்கொலை

By Karthik Yash
04 Nov 2025

தர்மபுரி, நவ.5: மகேந்திரமங்கலம் வீராசாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(50), விவசாயி. இவர் வீட்டில் இருந்த 40 பவுன் நகையை அடமானம் வைத்து, கால்நடை தீவன கடை வைத்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் 5 பவுன் நகையை மீட்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கான வருவாய் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தன் மகனிடம் புலம்பி வந்த முருகன்,...

பழுதடைந்த மின்கம்பங்களால் விபத்து அபாயம்

By Karthik Yash
31 Oct 2025

தர்மபுரி, நவ.1: தர்மபுரி குப்பாண்டித்தெரு ராஜாபேட்டை செல்லும் சாலையில் பழுதடைந்த மின்கம்பங்கள் உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சி 7வது வார்டு குப்பாண்டித்தெரு ராஜாபேட்டை செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் அருகே 2 மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பத்தில் இருந்து அருகில் உள்ள...

கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

By Karthik Yash
31 Oct 2025

தர்மபுரி, நவ.1: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை நூலள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்து மகள் கிருத்திகா (17). 10ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் திரும்பவில்ைல. இதுகுறித்து அவரது பெற்றோர் அதியமான்கோட்டை போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணாபுரம்...

எரியாத தெருவிளக்குகளால் மக்கள் அவதி

By Karthik Yash
31 Oct 2025

தர்மபுரி, நவ.1: பென்னாகரம் தாலுகா, பெரும்பாலை ஊராட்சி பூதநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் 19 தெருவிளக்குகள் உள்ளது. இதில் ஒன்றுகூட எரிவதில்லை. கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியாததால், கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது...

மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை

By Karthik Yash
30 Oct 2025

தர்மபுரி, அக்.41: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாளாப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகள் ரம்யா(19). இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளி. டிப்ளமோ முடித்து, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே நிறுவனத்தில் சம்பளம் குறைவாக தருவதால், அவரது பெற்றோர், ரம்யாவிடம் வேலைக்கு செல்ல வேண்டாம்,...

திருக்குறள் கருத்தரங்கம்

By Karthik Yash
30 Oct 2025

தர்மபுரி, அக்.31: தர்மபுரி மாவட்டம், நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். குறள் பேரவை பரமசிவம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மலர்வண்ணன் வாழ்த்தி பேசினார். பதிப்பாசிரியர் திருவேங்கடம் பங்கேற்று, திருக்குறளும் -வாழ்விலும் என்ற தலைப்பில் பேசினார். ரவீந்திர...

ஊழல் தடுப்பு குறித்த பிரசாரம்

By Karthik Yash
30 Oct 2025

தர்மபுரி, அக்.31: தர்மபுரி மாவட்டத்தில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவுபடி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், எஸ்ஐகள் முகுந்தன், சண்முகம் மற்றும்...

கங்கை நீரால் சிறப்பு வழிபாடு

By Karthik Yash
29 Oct 2025

தர்மபுரி, அக்.30: பாலக்கோட்டில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவேரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், நீர்நிலைகளை பாதுகாத்து குப்பை கொட்டாமல் இருக்கவும், நீர் நிலைகள் சுத்தமாக இருக்க வேண்டியும், பாலக்கோடு நதியில் கங்கை நீரை ஊற்றி சிறப்பு தீபாராதனை வழிபாடு நடந்தது. வழிபாட்டுக்கு மாவட்ட தலைவர் சங்கர்...

அரூர் அருகே கோயில் உண்டியலில் திருடிய 4 பேர் கைது

By Karthik Yash
29 Oct 2025

அரூர், அக்.30: அரூர் அடுத்த கீரைப்பட்டியில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இங்கு அதே ஊரை சேர்ந்த கங்கம்மாள் என்பவர் கோயிலை நிர்வகித்து வருகிறார். கடந்த 28ம்தேதி, வழக்கம் போல் மாலை பூஜைகளை முடித்து, பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கோயிலுக்கு சென்றபோது, கோயிலில் கதவு உடைக்கப்பட்டு உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை...