ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
பாப்பாரப்பட்டி, அக்.25: தர்மபுரி மாவட்டம் இண்டூர் பஸ் நிலையம் அருகில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பவர் கிரேட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் பாலு தலைமை தாங்கி துவங்கி வைத்தார். மயிலாட்டம், கரகாட்டம், பம்பை மற்றும் தவில் கலைஞர்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள் மூலம் ஊழலுக்கு எதிரான...
விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, அக்.25: கடத்தூர் ஒன்றியம் மயிலாபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும், விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் சிஐடியூ தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்ட தலைவர் தீர்த்தகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின்...
சுகாதார வளாகத்தில் பழுதான மின்மோட்டார்
பாப்பாரப்பட்டி, அக்.24: பென்னாகரம் ஒன்றியம், பனைக்குளம் ஊராட்சி வத்திமரதஅள்ளி கிராமத்தில், சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, சுமார் 800 பேர் வசிக்கின்றனர். இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் குளியலறை, கழிவறை மற்றும் துணி துவைக்கும் வசதியுடன் கூடிய, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, சுகாதார வளாகத்துக்கு...
கலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
காரிமங்கலம், அக்.24: காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி கலைத் திருவிழா நடந்தது. இதில் 30 போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், கல்லூரியில் படித்து வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ)...
பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
காரிமங்கலம், அக்.24: காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்று வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும், ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய நீர் நிலைகளில்...
குடைகள் விற்பனை ஜோர்
தர்மபுரி, அக்.23: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தில் குடை விற்பனை ஜோராக நடக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் இருந்து தப்பிக்கும் வகையில், குடை மற்றும் ஜெர்கின் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மழை சீசன் வியாபாரமான குடை, ஜெர்கின், ரெயின் கோட் விற்பனை கடைகள்,...
ஏரி, குளங்கள் நிரம்பியதால் பொதுமக்கள் குளிக்க தடை
தர்மபுரி, அக்.23: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற நீர்நிலைகள் பல இடங்களில்...
பள்ளிகaளுக்கு இன்று விடுமுறை
தர்மபுரி, அக்.23:தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு வரை தொடர் மழை பெய்ததால், இன்று (23ம்தேதி) பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் நவம்பர் 15ம்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவித்துள்ளார். ...
தர்மபுரியில் லேசான சாரல் மழை
தர்மபுரி, அக்.18: தர்மபுரியில் வளிமண்டல சுழற்சி காரணமாக இரு நாட்களாக மழையுடன் கூடிய மேக மூட்டத்துடன் இதமான சீதோஷ்ணநிலை நிலவுகிறது. தமிழகத்தில் கடந்த 16ம்தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியது. இதற்கிடையில் வங்க கடலில் ஏற்பட்ட வளி மண்டல சுழற்சி காரணமாக புயல் உருவானது. இதையொட்டி வடமாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம்...