மொரப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

அரூர், அக்.30: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் சரிதா(45), சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 28ம்தேதி, உடல்நிலை சரியில்லாததால், தர்மபுரி மருத்துவமனைக்கு சென்று விட்டார். அன்று மாலை வீட்டிற்கு வந்த அவரது மருமகன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறியிருப்பதை பார்த்து, சரிதாவிற்கு தகவல் தெரிவித்தார். வீட்டிலிருந்த லாக்கர்...

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

By Karthik Yash
28 Oct 2025

காரிமங்கலம், அக்.29: காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகளில், சட்டவிரோத மண் திருட்டு நடந்து வருவதாக வந்த புகாரின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டார். இதையடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மொரப்பூர் ரோடு மேம்பாலம் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, டிரைவர் லாரியை...

ஆடுகள் விற்பனை மந்தம்

By Karthik Yash
28 Oct 2025

காரிமங்கலம், அக்.29: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 600 ஆடுகள், 650 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஆடுகள் விற்பனை குறைந்தது. ரூ.30 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.55 லட்சத்திற்கு...

அம்பிகா பரமேஸ்வரி கோயிலில் திருக்கல்யாணம்

By Karthik Yash
28 Oct 2025

காரிமங்கலம், அக்.29: காரிமங்கலம் வாணியர் தெருவில் உள்ள அம்பிகா பரமேஸ்வரி மருதவாணேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 21ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடந்தது. கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. விழாவில்...

45 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

By Karthik Yash
27 Oct 2025

கடத்தூர், அக்.28: கடத்தூரில் நடைபெற்ற சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட 45 கிலோ பிளாஸ்டிக் கவர்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கடத்தூர் பேரூராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....

சூதாடிய 3 பேர் கைது

By Karthik Yash
27 Oct 2025

தர்மபுரி, அக்.28: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் எஸ்ஐ மதியழகன் மற்றும் போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, மோதூர்மலை அடிவாரத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் சூதாடிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(40), மற்றொரு பெரியசாமி(46),...

அவரை விளைச்சல் அமோகம்

By Karthik Yash
27 Oct 2025

தர்மபுரி, அக்.28: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. இதேபோல், வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது. பருவமழையை எதிர்பார்த்து தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட 7 தாலுகாக்களிலும் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் அவரை பயிரை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தர்மபுரி ஒன்றியத்தில் குள்ளனூர், கடகத்தூர்,...

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 16,058 பேர் பயன்

By Suresh
26 Oct 2025

தர்மபுரி, அக்.26: தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை நடந்த 12 நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமில், 16,058 பேர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை ெபற்று பயனடைந்துள்ளனர். மேலும், 929 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று...

குடிநீர் பிரதான குழாய் பழுது

By Suresh
26 Oct 2025

தர்மபுரி, அக்.26: தர்மபுரியில், பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதை சீரமைக்கும் பணி 2 நாள் நடக்கிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி நகராட்சிக்கு சொந்தமான பஞ்சப்பள்ளி, தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் குடிநீரினை, சந்தைப்பேட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் சேகரித்து, பொது மக்களுக்கு...

தொடர் மழை எதிரொலி: தர்மபுரியில் தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு

By Suresh
26 Oct 2025

தர்மபுரி, அக்.26: தர்மபுரியில், தொடர் மழை காரணமாக, தக்காளி மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகபாடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. பாலக்கோடு, தர்மபுரி, கம்பைநல்லூர் தக்காளி சந்தைக்கு சராசரி 100...