இன்ஸ்பெக்டர் நியமனம்
காரிமங்கலம், நவ.18: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள் மற்றும் போலீசார், கடந்த மாதத்தில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டனர். பல வாரங்களாகியும் இன்ஸ்பெக்டர் பணியிடம் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் போலீஸ் ஸ்டேஷனில் பல புகார்கள் தேக்கமடைந்து, பொதுமக்கள் சிரமப்பட்டனர். குற்றவாளிகளை பிடிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க...
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
மேட்டூர், நவ. 18: மேட்டூர் அருகே கருமலைக்கூடல் சக்தி தியேட்டர் பின்புறம் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி சாவித்திரி (64). இவர்கள் கடந்த 6ம் தேதி, சென்னையில் உள்ள மகன் யுவராஜ் வீட்டிற்கு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, யுவராஜ் கருமலைக்கூடலில் உள்ள வீட்டிற்கு வந்து சென்றார். நேற்று காலை அவரது வீட்டின்...
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
கடத்தூர், நவ.18: கடத்தூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி நேற்று மருத்துவரிடத்தில் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பிட வசதி. நோயாளிகளுக்கான குடிநீர், உடன் தங்குபவர்களுக்கு இருப்பிட வசதி ஆகிய வற்றை கேட்டறிந்தார்....
மளிகை கடை மேற்கூரையை பிரித்து கொள்ளை முயற்சி
தர்மபுரி, நவ.15: தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(47). இவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல கடையை திறந்துள்ளார். அப்போது, கடையின் பின்பக்க மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் சம்பவ இடம்...
குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
தர்மபுரி, நவ.15: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை சுதா தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது சிறந்த பண்புகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து மாணவிகளின் சார்பில் பரதநாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மேலும்,...
11,935 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
தர்மபுரி, நவ.15: தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 11,935 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சதீஸ் தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்...
இளம்பெண் மாயம் போலீசில் புகார்
அரூர், நவ. 13: மொரப்பூர் அருகே செட்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கைலாசம் மகள் சுகன்யா (25). இவர் தனது படிப்பை முடித்து விட்டு, கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். வேலையை விட்டு விட்டு, கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்த அவர், கடந்த 10ம் தேதி இரவு...
தர்மபுரியில் கடும் குளிர்
தர்மபுரி, நவ. 13: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதேபோல், வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக வானம் வறண்டு காணப்பட்டது. கடும் குளிர்காற்று வீசியது. மேலும், பனிமூட்டம் காரணமாக, சாலையில் 30 அடி தொலைவில் உள்ள வாகனங்கள்...
தர்மபுரியில் டிரைவர் நடத்துனர்களுக்கு பயிற்சி
தர்மபுரி, நவ. 13: தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டிரைவர், நடத்துனர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ் ராஜ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பாதுகாப்பான இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் செல்வம், துணை மேலாளர் (தொழில்நுட்பம்), துணை மேலாளர் (வணிகம் மற்றும் போக்குவரத்து) மற்றும் ஓட்டுநர்,...