மாவட்டத்தில் ரூ.24.22 கோடியில் 173 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்காக, ரூ.24.22 கோடி மதிப்பீட்டில் 173 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் பிரச்னை கடுமையாக இருந்தது. தர்மபுரி நகராட்சி பகுதிக்கு மட்டும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து பிரதான குழாய் மூலம் 2...

காரில் கடத்தி வந்த 24 கிலோ குட்கா பறிமுதல்

By MuthuKumar
22 Jul 2025

தர்மபுரி, ஜூலை 23: பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் எஸ்ஐ மணி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மண்ணேரி சஞ்சீவிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்கள் எதையோ கீழே இறக்கி கொண்டிருப்பதை பார்த்த போலீசார் சந்தேகமடைந்து, அருகில் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், 2 வாலிபர்களும்...

சாலையில் முறிந்து விழுந்த புளியமரம்

By MuthuKumar
22 Jul 2025

கடத்தூர், ஜூலை 23: கடத்தூர் அடுத்த வெங்கடதாரஅள்ளி சாலையில், ஆத்துபாலம் அருகே நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான புளியமரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், புட்டிரெட்டிபட்டி-கடத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கடத்தூர் போலீசார், பொக்லைன் மூலம் சாலையில் விழுந்த புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் கடத்தூர்- புட்டிரெட்டிப்பட்டி...

பேரூராட்சிகள் துறை சார்பில் ரூ.184.41 கோடியில் 2,387 பணிகள்

By MuthuKumar
22 Jul 2025

தர்மபுரி, ஜூலை 23: தர்மபுரி மாவட்டத்தில், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.184.41 கோடி மதிப்பிலான 2,387 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 704 பேர் பயனடைந்துள்ளனர் என கலெக்டர் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில் 10 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும்...

காரில் கடத்தி வரப்பட்ட 188 கிலோ குட்கா பறிமுதல்

By MuthuKumar
21 Jul 2025

தர்மபுரி, ஜூலை 22: கர்நாடகாவில் இருந்து, காரில் கடத்தி வரப்பட்ட 188 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் தொப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பாளையம்புதூர் டோல்கேட் அருகே வாகன சோதனை...

சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

By MuthuKumar
21 Jul 2025

தர்மபுரி, ஜூலை 22: தர்மபுரி டவுன் குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. காலையில் உற்சவர் சிவசுப்ரமணியசுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விரதமிருந்த பெண்கள் மற்றும்...

பயன்பாட்டுக்கு வந்த புதிய சுங்கசாவடி

By MuthuKumar
21 Jul 2025

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 22: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. வாணியம்பாடி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.320 கோடி மதிப்பீட்டில் ஊத்தங்கரை முதல் ஏ.பள்ளிப்பட்டி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எருமையாம்பட்டி, எச்.புதுப்பட்டி...

டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் காயில், ஆயில் திருட்டு

By MuthuKumar
20 Jul 2025

பாலக்கோடு, ஜூலை 21: தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் விடியற்காலை வரை மின்சாரம் வராததால், அப்பகுதியினர் டிரான்பார்மர் அருகே சென்று பார்த்தனர். அப்போது டிரான்பார்மர் உடைக்கப்பட்டு, பொருட்கள் கீழே சிதறிய நிலையில் கிடந்தன. இது குறித்து மின்வாரியத்திற்கு...

பைனான்சியரிடம் ரூ.50ஆயிரம் பறிப்பு

By MuthuKumar
20 Jul 2025

தர்மபுரி, ஜூலை 21: தர்மபுரியில் பைனான்சியரிடம் ரூ.50ஆயிரம் பறித்து வனப்பகுதிக்குள் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (58). பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து, அதை சனிக்கிழமை தோறும்...

ரூ.30 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

By Karthik Yash
19 Jul 2025

அரூர், ஜூலை 20: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது. சந்தையில் ஆடு, கோழிகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில் 170க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்....