புற்று நாகர்கோயிலில் பெண்கள் வழிபாடு
தர்மபுரி, ஜூலை 30: நாக பஞ்சமியையொட்டி, தர்மபுரி செந்தில் நகரில் உள்ள புற்று நாகர்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாக பஞ்சமியையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புற்று கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தர்மபுரி செந்தில் நகரில் உள்ள கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான...
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நீதிமன்ற நுழைவு வாயில் முன் நடைபெற்றது. போராட்டத்திற்கு தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அழகமுத்து தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன், துணைத்தலைவர் குமார், இணை செயலாளர் சங்கீதா, மூத்த...
நெல் நாற்று நடவு பணி மும்முரம்
தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி மாவட்டத்தின் விவசாயத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியன முக்கிய சாகுபடியாகும். நெல் பயிர் செய்வதில் அனைத்து பகுதி மக்களும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் 24 ஆயிரம் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இந்நிலையில்,...
சேதமான ஆற்றுப்பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை
தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி அருகே, சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்ட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்லப்பட்டி பிரிவு சாலையில் இருந்து கொல்லப்பட்டி, மூலக்காடு, தாலிகாரன் கொட்டாய் செல்லும் சாலை உள்ளது. வழிநெடுகிலும் 10க்கும் மேற்பட்ட...
ஒகேனக்கல்லில் கலெக்டர் நேரில் ஆய்வு
தர்மபுரி, ஜூலை 28: கர்நாடக அணைகளிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து சுமார் 1...
ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்கு ஆலை அமைக்க ஒப்புதல்
தர்மபுரி, ஜூலை 28: தர்மபுரி அருகே நெக்குந்தி கிராமத்தில் 900 ஏக்கரில் ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்காக ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் உற்பத்தி பணி தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பில் தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய பகுதியாக உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே பிரதானமாக உள்ளது. வேலைவாய்ப்பு...
அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
கடத்தூர், ஜூலை 26: கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில் நேற்று நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அசோகன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் மனோகரன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் இம்பிரியாஜெகன் முன்னிலை வகித்தார். பள்ளியின்...
சாலை பணிகளை பொறியாளர்கள் ஆய்வு
தர்மபுரி, ஜூலை 26: பென்னாகரம் பகுதியில் நடந்து வரும் சாலை பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தர்மபுரி கோட்ட பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பென்னாகரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் மற்றும் தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்...
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி, ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனைகள் நடந்தது. முத்தம்பட்டி ஆஞ்சநேயர்...