புற்று கோயிலில் திரண்ட பக்தர்கள்
தர்மபுரி, ஆக.2: தர்மபுரி எம்ஜிஆர் நகர் நாகாத்தம்மன், நாகபத்தரகாளி புற்று கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் வளையல், ஜாக்கெட் பிட், தாலி சரடு, குங்குமம் படைத்து அம்மனை வழிபட்டனர். மேலும், பெண்கள் அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி நாகாத்தம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில்...
விதிமீறி எதிர்திசையில் செல்லும் வாகனங்கள்
தர்மபுரி, ஆக.2: பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது முதல், நாள்தோறும் சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் தர்மபுரி வழியாக செல்கின்றன. இந்த சாலையில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் 300 விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரு -சேலம் தேசிய நெடுஞ்சாலையில்,...
கோயில் கட்டியதில் முறைகேடு
தர்மபுரி, ஆக.2: தர்மபுரி அருகே புதிதாக கோயில் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கிராம மக்கள் திரண்டு வந்து எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மிட்டா தின்னஅள்ளி கோம்பேரி கிராமத்தைச் சேர்ந்த பூபால் மற்றும் கிராம மக்கள் நேற்று எஸ்பி ஆபீசுக்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள்...
பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்
காரிமங்கலம், ஆக.1: காரிமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் தற்போது நடந்து வரும் மக்கள் நலத்திட்ட பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை பணிகள் உட்பட பல்வேறு அடிப்படை...
வரத்து சரிவால் நெல் கொள்முதல் நிறுத்தம்
அரூர், ஆக.1: அரூர், நரிப்பள்ளி நிலையங்களில் வரத்து சரிவால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பு(2024-2025) சம்பா பருவத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், அரூர் மற்றும் நரிப்பள்ளியில் கடந்த மார்ச் 11ம் தேதி முதல் நேரடி...
பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
அரூர், ஆக.1: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே சாமாண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சாரதா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். அவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. ஆசிரியர்கள் கோவிந்தராஜ், சிவராஜ், உஷா ராணி, சரண்யா, பூமதி மற்றும்...
ரூ.21.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூர், ஜூலை 31: தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ், அரூர் கச்சேரி மேட்டில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், அரூர் மற்றும் மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 700 மூட்டை பருத்தியை கொண்டு வந்து விவசாயிகள் குவித்தனர். ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.7,599 முதல்...
வளர்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு
காரிமங்கலம், ஜூலை 31: காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சரவணன்,...
தரைமட்ட பாலங்களை பராமரிக்கும் பணி தீவிரம்
தர்மபுரி, ஜூலை 31¬: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகளில் 200க்கும் மேற்பட்ட தரைமட்ட பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களை பராமரிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜூ அறிவுறுத்தலின் பேரில் துவங்கியுள்ளது. இந்த பணியில் பாலங்களுக்கு வர்ணம் பூசுதல், பாலங்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் எச்சரிக்கை போர்டுகள் வைத்தல், தூர்வாருதல்...