விழுப்புரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி பெண் பலி

விழுப்புரம், ஆக. 2: விழுப்புரம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தார். விழுப்புரம் அருகே மழவராயனூரை சேர்ந்தவர் தினேஷ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி(23). நேற்றுமுன்தினம் தினேஷ்குமார் தனது மனைவியை இருசக்கரவாகனத்தில் அழைத்துகொண்டு சொந்தகிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார். எல்லீஸ்சத்திரம் பகுதியிலிருந்து ஏனாதிமங்கலம் நோக்கிசென்றபோது வளைவில் அதிவேகமாக வந்த மற்றொரு பைக் நேருக்குநேர் மோதியது....

மாத்திரைகளை மாற்றி சாப்பிட்ட பெண் சாவு

By Karthik Yash
01 Aug 2025

காட்டுமன்னார்கோவில், ஆக. 2: காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி முத்துக்குமரன்(33,). இவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமயிலாடி கிராமத்தைச் சேர்ந்த வினோதினிக்கும் (30) கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இவரது வீட்டில் முத்துக்குமரனின் தங்கை புவனேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரை...

ரயிலில் இருந்து தவறி விழுந்து சென்னை காவலர் பலி

By Karthik Yash
01 Aug 2025

திண்டிவனம், ஆக.2: திண்டிவனம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து ெசன்னை காவலர் பலியானார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே திண்டிவனம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்னை விழுப்புரம் மார்க்கமாக ரயில்வே இருப்பு பாதை செல்கின்றது. இப்பகுதியில் நேற்று முன்தினம் (45) வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயில்வே பாலத்தின் அருகே மழை நீர்...

சங்கராபுரம் அருகே பரிதாபம் ஊஞ்சல் சேலை கழுத்தில் இறுகி 10ம் வகுப்பு மாணவி சாவு

By Karthik Yash
31 Jul 2025

சங்கராபுரம், ஆக. 1: சங்கராபுரம் அருகே ஊஞ்சலில் விளயைாடியபோது கழுத்தில் சேலை இறுகி 10ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காசிவேல் மகள் தன்சிகா (15). இவர் அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை காசிவேல்...

பண்ருட்டி அருகே திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

By Karthik Yash
31 Jul 2025

பண்ருட்டி, ஆக. 1: பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் எதிரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு இருந்தது. இந்த பயணியர் நிழற்குடையில் ஊர் பெயர் எழுதுவதில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பேர் பெரியான்குப்பம் பயணியர் நிழற்குடை என எழுதி இருந்தனர்....

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

By Karthik Yash
31 Jul 2025

சிதம்பரம், ஆக. 1: சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடி பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் மகன் தமிழ் இனியன்(29), பொறியியல் படித்து முடித்துள்ளார். இவரும் 23 வயது பெண்ணும் கடந்த 2023லிருந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் இனியன் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள அப்பெண்...

கடலூரில் சதமடித்த வெயில்

By Karthik Yash
30 Jul 2025

கடலூர், ஜூலை 31: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையே வெப்ப சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. கோடை காலத்தை மிஞ்சும் வகையில் அக்னி நட்சத்திரம்...

பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

By Karthik Yash
30 Jul 2025

மரக்காணம், ஜூலை 31: மரக்காணம் அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அனுமந்தை டோல்கேட் அருகில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து பைக்கில் ஒருவர் வேகமாக வந்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி சோதனை செய்துள்ளனர். அப்போது புதுவை மாநிலத்தை சேர்ந்த மதுபாட்டில்கள் 100 அவரிடம்...

புதுச்சேரி அருகே பரிதாபம் பல் மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

By Karthik Yash
30 Jul 2025

புதுச்சேரி, ஜூலை 31: புதுச்சரி அருகே பல் மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி வில்லியனூர், சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிதேவன் (50). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டீனாக உள்ளார். இவரது மகன் கார்த்திக் ராஜா (24). அரியூர் பகுதியில் தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில்...

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் மறியல்

By Karthik Yash
29 Jul 2025

சிதம்பரம், ஜூலை 30: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ராயப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் எழில்ராஜன் (33). இவருக்கு முத்துலட்சுமி (26) என்ற மனைவியும், நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமி இரண்டாவதாக கர்ப்பம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை...