நாயகனைப்பிரியாள் கிராமத்தில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

தா.பழூர், டிச.8: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் நாயகனைப்பிரியாள் கிராமத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மருத்துவர் அணி தலைவர் சங்கர் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய...

ஜெயங்கொண்டம் அருகே விவசாய தொழிலாளி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது

By Ranjith
08 Dec 2025

ஜெயங்கொண்டம், டிச.8: ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் ராஜேந்திரன் (46). விவசாய தொழிலாளி. இவர்...

பஸ்சிலிருந்து விழுந்தவர் படுகாயம்

By Karthik Yash
03 Dec 2025

தேவதானப்பட்டி, டிச. 4: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் விசால் (17). இவர் நேற்று முன்தினம் தேவதானப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்றுள்ளார். காட்ரோட்டை கடந்து பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது விஷால் திடீரென நிலை தடுமாறி தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக...

வருகிற 2,3ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடுதேடி விநியோகம்

By Ranjith
29 Nov 2025

அரியலூர், நவ.29: அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, அரியலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 25,674...

பொன்பரப்பி கிராமத்தில் 58 வது நூலக வர விழா

By Ranjith
29 Nov 2025

ஜெயங்கொண்டம், நவ.29: செந்துறை அருகில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள பொன்பரப்பி கிளை நூலகத்தில் நேற்று முன்தினம் மாலை 58-வது தேசியநூலக வாரவிழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். நூலக வாசகர்...

அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆய்வு

By Ranjith
29 Nov 2025

ஜெயங்கொண்டம் நவ.29: திருமானூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் திருமானூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து கேட்டிருந்தார். வழக்குகளை விரைவாக முடிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான...

தையல் பயிற்சி முடித்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு இலவச தையல் இயந்திரம்

By MuthuKumar
27 Nov 2025

அரியலூர் நவ 28: தையல் பயிற்சி முடித்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ள முன்னாள் ராணுவ வீரரின் மனைவி...

அரியலூர் வட்டாரம் பொய்யாதநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாம்

By MuthuKumar
27 Nov 2025

அரியலூர், நவ.28: அரியலூர் வட்டாரம் பொய்யாதநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா கடந்த ஆக்.2ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் அரியலூர் சுகாதார...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு வாகனம்

By MuthuKumar
27 Nov 2025

அரியலூர் நவ 28: அரியலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தயார் செய்தல், பயிற்சி, அச்சிடுதல் மற்றும் கணக்கெடுப்பு...

நாளை கலெக்டர் தலைமையில் அரியலூர் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்

By MuthuKumar
26 Nov 2025

அரியலூர், நவ.27: வரும் 28ம் தேதி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வெரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாய அமைப்பினர், சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து ஆலோசனை நடத்துவர். இதனடையே...