தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறைவனுக்கு எதற்கு இடைத்தரகர்கள்?

அந்த ஞானியைச் சுற்றி ஒரே கூட்டம். அவர் முகத்தைக் காண மக்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னேறுகிறார்கள்.பூக்கள், பழங்கள், பணம் என்று ஏராளமான காணிக்கைப் பொருள்கள் மகானின் காலடியில் குவிக்கப்படுகின்றன.அவர் என்ன இறைவனா?

Advertisement

‘இல்லை’ என்று அங்கு குழுமியிருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். பிறகு ஏன் அவருடைய தரிசனத்திற்குக் காத்துக் கிடக்கிறார்கள்?ஒரு பக்தரிடம் கேட்டேன். “இவர்தான் உங்கள் இறைவனா?”

“அதெல்லாம் இல்லீங்க.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்திக்க முடியுமா? இவர்களைப் போன்ற மகான்கள் மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும்.”அதாவது, இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் ‘இடைத்தரகர்’ இருந்தால்தான் அவர் மூலம் இறையருளைப் பெற முடியும் என அப்பாவி மக்கள் மட்டுமல்ல, படித்தவர்களும்கூட நம்புகின்றனர்.மக்களின் இந்த நம்பிக்கையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ‘மதகுருக்கள்’ சிலர் கொள்ளை லாபம் அடைகின்றனர். மகான் அல்லது துறவி என்று சொல்லிக்கொண்டே குறுநில மன்னர்களைப் போல் சொகுசாக வாழ்கின்றார்கள்.

உலகில் ஏராளமான குட்டித் தெய்வங்களும் போலி குருக்களும் தோன்றுவதற்கு மக்களின் இந்த மூடநம்பிக்கைதான் காரணம். இந்த மூடநம்பிக்கையின் ஆணிவேரை இரத்தினச் சுருக்கமாக ஒரே ஒரு சொற்றொடர் மூலம் தகர்த்தெறிந்துவிட்டது திருக்குர்ஆன்.“திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கிறான். (பிரார்த்தனைகளுக்கு) விடை அளிப்பவனாக இருக்கிறான்.” (குர்ஆன் 11:61)‘இறைவன் உங்களைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறான் எனும் உங்களின் கருத்து தவறு; அவனை நீங்கள் நேரடியாக அழைத்து, உங்கள் இறைஞ்சுதல்களுக்குப் பதில் பெற முடியாது எனும் எண்ணம் தவறானது.

‘உங்கள் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே இறைவன் இருக்கிறான். நீங்கள் அவனுடன் பேச முடியும். உங்களுடைய பிரார்த்தனைகளை நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும். தன் அடியார்களின் இறைஞ்சுதல்களுக்கு இறைவனே பதில் அளிக்கிறான். இந்தப் பேரண்டத்தின் மாபெரும் ஆட்சியாளனான இறைவனின் திருச்சந்நிதி எப்போதும் மனிதர்களுக்குத் திறந்தே இருக்கிறது. ஆகவே அவனை அடைய, அவனுடைய திருவருளைப் பெற இடைத்தரகர்களையும் மதகுருக்களையும் குட்டித் தெய்வங்களையும் தேடித் திரியும் மடமையில் ஏன் உழல்கிறீர்கள்’ என்று இறுதி வேதம் கேட்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்று ஆன்மிகம் தொடங்கி அரசியல் வரை எத்தனை எத்தனை தெய்வங்கள்!இந்த ஒரே ஒரு திருவசனத்தை மட்டும் மனிதர்கள் வாய்மையாகப் பின்பற்றினால் உலகிலுள்ள அத்தனை போலித் தெய்வங்களும் காணாமல் போய்விடும்.உண்மையான ஆன்மிக வழியில் மனித வாழ்வு தழைத்தோங்கும்.

இந்த வார சிந்தனை

“அவன் (இறைவன்) மாபெருங்  கருணையாளன். தனிப்பெரும் கிருபையாளன். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கிறான்.” (குர்ஆன் 1:2-3)

சிராஜுல் ஹஸன்.

Advertisement

Related News