வெற்றிக் கதவுகளை திறக்கும் ஸ்ரீவிஷ்ணுமாயா கோயில்

கருவண்ணூர், சிறியப்பாளம், திருச்சூர், கேரளா திருச்சூரின் கருவண்ணூர் சிறியப்பாளத்தில் அமைந்துள்ள, கேரளாவின் மிக வலிமையான கோயில்களில் ஒன்றாகும். ஸ்ரீ விஷ்ணுமாயா குழந்திச்சாத்தன் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோயில், ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் பக்தியும், மாந்திரீக சேவைகளும், பாரம்பரியமும் கொண்ட தாகும் ஆகும். தெய்வீக தோற்றம் பல நூற்றாண்டுகளுக்கு முன்,...

நலன்கள் எல்லாம் அருளும் நரசிம்ஹி தேவி

By Porselvi
14 hours ago

அம்பிகையின், ஆணைகளை சிரமேற்கொண்டு செய்பவர்கள்தான் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் கோடிகள் இருப்பார்கள். ஆனால், இந்த பல்லாயிரம் கோடி யோகினிகளில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் அறுபத்தி நான்கு பேர்கள்.‘கடாக்ஷ கிங்கரி பூத கமலா கோடி சேவிதா’ என்று லலிதா சஹஸ்ரநாமமத்தில் ஒரு நாமம் இடம் பெறுகிறது. இது, அம்பிகையின் கிருபைக்கு பாத்திரமாவதற்காக, அம்பிகை இடும்...

ஒப்பற்ற பொருள்

By Porselvi
14 hours ago

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 106 (பகவத்கீதை உரை) பொருள் மீதான பற்றைத் துறப்பதற்கு பகவானுடன் ஒன்றியிருத்தலாகிய பக்குவம் வேண்டும். இதை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், நம் அன்றாட நடைமுறையை ஒட்டியே விளக்குகிறார்:பால், தண்ணீர், இரண்டையும் கலந்தால் பால் தன் இயல்பான வண்ணத்தை இழந்து தானும் நீர்த்துப் போகும், நீரோடு நீராகும். அதே பாலின் உபபொருளான வெண்ணெயை...

இயேசுவின் பெயரை உயர்த்தி, உயர்வடைவோம்!

By Porselvi
16 hours ago

ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் கொத்தி கொண்டிருந்த அதே நேரத்தில், ஒரு மின்னல் அந்த மரத்தைத் தாக்க, அந்த மரம் கீழே சாய்ந்தது. மரங்கொத்திப் பறவைக்குப் பெருமை தாங்கவில்லை. ``நான் கொத்தியதால்தான், இந்த மரம் விழுந்தது, என் அலகு எவ்வளவு பலம் வாய்ந்தது’’ என்று பெருமை கொண்டது. அதுமட்டுமல்ல, இன்னும் பல...

செல்வம் வரும் வழியும் போகும் வழியும் முக்கியம்...

By Porselvi
16 hours ago

மனிதப் பிறவியில் செல்வம் ஒருவருக்கு இரண்டு வழிகளில் வரும். ஒன்று அதிர்ஷ்டமாக ,நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தானே வர வேண்டிய காலத்தில் அது இஷ்டமாக வரும்.இன்னொன்று ஒருவருடைய முயற்சிக்குத் தகுந்தபடி வரும்.அது இஷ்டம் ஆக வருவதால் நம் கட்டுப்பாட்டில் அந்தச் செல்வம் இல்லை. அந்தச் செல்வம் நமக்கு பயன்படலாம் அல்லது பயன்படாமல் போகலாம்.உதாரணமாக ஒருவர்...

தினப் பொருத்தம் முக்கியமானதா?

By Gowthami Selvakumar
01 Nov 2025

தினப் பொருத்தம் என்பதே தினந்தோறும் கணவன் மனைவிக்குள் உண்டான பேச்சுக்கள், உரையாடல்கள், வாதங்கள் போன்றவற்றை குறித்துப் பேசுவதாகும். ஒரு நாளோ இரு நாளோ அல்ல மரண பரியந்தம் வரை தினந்தோறும் பார்த்துப் பழகுவதற்கான பொருத்தமென்பதால்தான் முதலில் இதை வைத்திருக்கிறார்கள். தினமும் எப்படியிருப்பார்கள் என்பதால்தான் தினப் பொருத்தம். மேலும், இந்த பொருத்தத்தை பார்த்துவிட்டால் முரண்பாடுகளற்ற வாழ்க்கையை எளிதாக...

அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர்

By Gowthami Selvakumar
01 Nov 2025

மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மஹாவிஷ்ணு. அவரின் உயிரை பறித்த தோஷம் நீங்க சிவபெருமானை வேண்டினார். அப்பொழுது சிவபெருமான் தோன்றி பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப் பெறும் என்றார். அதன்படி, பல தலங்களுக்கு சென்று மஹாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டார். அப்படி, அறகண்ட நல்லூரில் வழிபட்ட பொழுது சிவபெருமான காட்சி...

துரு துரா யோகம்

By Gowthami Selvakumar
01 Nov 2025

பலவிதமான யோகங்கள் இருந்தாலும், எப்பொழுதும் எல்லோராலும் புகழப்பட்டும் எல்லோரும் விரும்பும் அல்லது சந்திக்கும் மனிதராக இருப்பவர்கள் சிலர் மட்டுமே. இவரை மட்டும் ஏன் பலர் நாடிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழும். அவ்வாறு எழும் கேள்வி இயல்புதான். அதுபோலவே, சிலர் எப்பொழுதும் தனிமை விரும்பியாகவும், தனிமை இவர்களை ஆட்கொண்ட நபர்களாகவும் இருப்பர். ஆனாலும்,...

புத்திர பாக்கியம் பெற்றிடும் வரத்திற்கான எளிய பரிகாரங்கள்

By Gowthami Selvakumar
01 Nov 2025

``குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்’’ - என்ற குறளுக்கு ஏற்ப, குழந்தை இல்லை என்றால் குடும்பத்தில் ஏற்படும் கவலைகளுக்கு அளவே இல்லை. குழந்தை இல்லாத பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களும் அவமரியாதைகளும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தாய்மை, இறைவனின் வரப்பிரசாதம். இன்றைக்கு மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறிவிட்டாலும், இன்றும் ஏராளமானோர்...

இந்த வார விசேஷங்கள்

By Gowthami Selvakumar
01 Nov 2025

1-11-2025 - சனிக்கிழமை - பேயாழ்வார் திருநட்சத்திரம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் முதல் ஆழ்வார்களில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் திருநட்சத்திரம். எல்லா பெருமாள் கோயில்களிலும் முதல் ஆழ்வார்கள் திருநட்சத்திர சாற்றுமறை நடைபெறும். ஐப்பசி சதயம் என்பது ராஜராஜசோழன் திரு நட்சத்திரமும் கூட. இன்று தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழன் சதய நட்சத்திர விழா...