தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுபகாரியங்கள் ஆடி மாதத்தில் செய்வதில்லை, ஏன்?

12 தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என புராணம் கூறுகிறது. அதிலும் முக்கியமாக ஆடி மற்றும் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதை நம் இன்றும் வழிவழியாக பின்பற்றி வருகிறோம். அறிவியல் யுக காலத்திலும் கூட இந்துக்கள் ஆடி மற்றும் மார்கழி மாதத்தில் திருமணம் போன்ற எவ்வித சுப நிகழ்ச்சியும் வைத்துக் கொள்வதில்லை. அதற்கான காரணம் இதோ…

இந்து மதத்தில் ஆடி மாதத்தை சுபகாரியம் செய்வதற்கு பயன்படுத்துவதில்லை. ஆடி மாதத்தில்தான் குருக்ஷேத்திரப் போரும் நடைபெற்றது. அறிவியல் ரீதியாகப் பார்க்கப் போனால் ஆடி மாதத்தில் திருமணம் நடத்தி அம்மாதத்தில் கர்ப்பம் தரித்தால் பிறக்கப்போகும் குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும்.

சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இளவயதுடையவர்களுக்குக் கூட சித்திரை வெயிலின் தாக்கத்தை பொறுத்துக் கொள்ள இயலாத கால கட்டத்தில் பிறந்த குழந்தையினால் தாங்கிக் கொள்ள இயலுமா?

சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தையை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வளர்ப்பது கடினமாக இருக்கின்ற காரணத்தினால் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதைத் தவிர்த்தனர். மாதம் மும்மாரி மழை பொழியும் அக்காலத்திலேயே இது போன்ற விஷயங்களை நம் முன்னோர்கள் கடைபிடித்திருக்கிறார்கள்.

- டி.லதா, நீலகிரி.

Related News