தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காமரசவல்லியின் கவின்மிகு சிற்பங்கள்

ஆலயம்: கார்கோடேஸ்வரர் கோயில், காமரசவல்லி, அரியலூர் மாவட்டம், (தஞ்சாவூர் - பழுவூர் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது)

காலம்: இவ்வாலயம் கட்டப்பட்டது, முதல் பராந்தக சோழன் (907 - 955) காலத்தில் எனவும் இரண்டாம் பராந்தக சோழன் / சுந்தர சோழர் (963-980) காலத்தில் எனவும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

பாம்புகளின் அரசனான கார்க்கோடகன், தனது சாபத்திலிருந்து விடுபட இவ்வாலய சிவ பெருமானை வழிபட்டதால் இக்கோயிலின் இறைவன் ‘கார்கோடேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமானால் எரிக்கப்பட்ட தன் கணவன் மன்மதனை ரதி தவமிருந்து மீட்டதால் இந்த ஊர் ‘காமன்ரதிவல்லி’ என்ற பெயர் பெற்று, பின்பு மருவி ‘காமரசவல்லி’ என்றழைக்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. சுந்தர சோழர், முதலாம் ராஜராஜன், விக்கிரமச்சோழன், மூன்றாம் ராஜராஜன், திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டியத்தேவன், ஹொய்சாலா மன்னர் ஆகியோர் இக்கோயிலுக்கு அளித்த பல்வேறு கொடைகளைப்பற்றிய தகவல்களை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.சோழர் காலத்தில் ‘காமரசவல்லி சதுர்வேதி மங்கலம்’ என்றழைக்கப்பட்ட இவ்வூரின் இறைவன் ‘‘திருநல்லூர் பரமேஸ்வரர்’’ என்றும், ‘திரு கர்கோடக ஈஸ்வரத்து மகாதேவர்’ என்றும் அழைக்கப்

பட்டார்.வட்ட வடிவம் கொண்ட செங்கல் கட்டுமானம் உடைய மூன்று தள விமானம் கொண்ட கருவறையினுள் அச்சமூட்டும் தோற்றத்துடன் துவாரபாலகர்கள் அழகுடன் காட்சியளிக்கின்றனர்.

இறைவன்: சௌந்தரேஸ்வரர் / கார்கோடேஸ்வரர்.

இறைவி: பாலாம்பிகை வெளிப்புற சுவரெங்கும் அற்புத சிற்பங்கள் நிறைந்துள்ளன. தாங்கு தளத்தில் புராண காட்சிகள் நிறைந்த கண்டபாத குறுஞ் சிற்பங்கள், சிவனின் ஆடல் காட்சி, கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காளமூர்த்தி, பிட்சாடனர், பிரம்மன், துர்க்கை, கணேசர் சிற்பங்கள் ஆகியவற்றின் பேரெழில் காண்போரைக்கவர்ந்திழுக்கும்.