தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கார்த்திகை மாதமும் அதன் சிறப்புகளும்

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு, அதிகளவு மழை பெய்யும் கார் காலமாகும். காந்தன் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. 4விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்தால் அரிதான மோட்ச நிலை கிடைக்கும். துளசி இலையால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

4சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து தீபப் பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகை முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.4கார்த்திகை பவுர்ணமி நாளில் முருக வழிபாட்டிற்கும் கார்த்திகை தீப நாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. 4கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெறலாம்.

4திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி நாளில் தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், இந்திரன், வாயு தேவர்களும், குபேரன், யமன் வலம் வந்துள்ளதாகவும், மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் வலம் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று மட்டுமே அர்த்தநாரீஸ்வரராக வெளிவருவது சிறப்பு. 4கார்த்திகையில் சோமவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதத்தில் தீபம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.

4இம்மாதத்தில் சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், விநாயகர், சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரம்மாதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

4கார்த்திகை மாத அமாவாசை நாளில் திருவீச நல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் உள்ள கிணற்றில் கங்கை பிரவேசிப்பதாக நம்பிக்கை. 4சென்னை திருெவாற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் புற்று வடிவ லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பவுர்ணமியிலிருந்து மூன்று நாட்கள் மட்டும் கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.

4திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து மடக்கு தீபாராதனை நடைபெறும். இங்கு நெல்லிக்கனி பிரசாதம் சிறப்பு. கார்த்திகை மாதம் அனைத்து தெய்வங்களுக்குரிய மாதம். ஆதலால் போற்றி அருள் பெறுவோம்.

தொகுப்பு: எம்.வசந்தா, சென்னை.

Related News