தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குருவி ஞானம்

சாலையோரத்து ஆலமரம். மூட்டை முடிச்சுகளுடன் வந்த ஒரு மனிதன் ‘உஸ்..’ என்று தன் களைப்பை வெளிப் படுத்தியபடி, மரத்தின் அடியில் அமர்ந்தான். நீண்ட தொலைவு வெயிலில் நடந்து வந்ததால் அவன் உடலில் வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அவன் முகத்தில் இனம்புரியாத ஒரு கவலை ரேகை. எதையோ பறிகொடுத்த தோற்றம்.
அந்த மனிதனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன மரத்தில் இருந்த இரு குருவிகள் ஒன்று ஆண் குருவி. இன்னொன்று பெண் குருவி.
பெண் குருவி கேட்டது: ‘‘இந்த மனிதர்கள் ஏன் எப்போதும் கவலையில் மூழ்கிக் கிடக்கிறார்கள்?’’
ஆண் குருவி பதில் கூறியது: ‘‘தம் உணவுக்காகத்தான் இப்படி அலைகிறார்கள்.’’
பெண் குருவி விடவில்லை. ‘‘நாமும் தான் உணவுக்காக அலைகிறோம். நாம் கவலைப்படுவதில்லையே?’’
‘‘அவர்களுக்கும் நமக்கும் இரண்டு வித்தியாசங்கள் இருக்கின்றன.’’
‘‘என்ன வித்தியாசங்கள்’’
‘‘முதல் வித்தியாசம், நாம் இறைவனை சார்ந்து வாழ்கிறோம். அவன் அருளால் உணவு கிடைக்கும் என்று நம்புகிறோம். மனிதர்கள் அவ்வாறில்லை. அவர்கள் இறைவனைச் சார்ந்திருப்பதில்லை. தம் முயற்சியினால் மட்டும் தான் கிடைக்கிறது என்று அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.’’
‘‘எவ்வளவு ஆணவம்! சரி, இன்னொரு வித்தியாசம்?’’
‘‘அது, கிடைத்ததைப் பெற்று இறைவனுக்கு நன்றி செலுத்தும் குணம். மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் நிறைவு ஏற்படுவதில்லை. அதனால் இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. மேலும் செல்வம் சேர்ப்பதிலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடுகிறார்கள். எப்போதும் அந்தக் கவலை தான்! அப்புறம் என்று நிம்மதி அவனை தேடி வரும்?’’
‘‘நல்லா சொன்னீங்க. ஒரு விஷயத்துக்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.’’
‘‘எதுக்கு?’’
‘‘நல்லவேளை, இறைவன் நம்மை மனித இனத்தில் படைக்கவில்லை.’’
  - சிராஜுல் ஹஸன்.
இந்த வார சிந்தனை
‘இறைவா, இறையச்சமற்ற உள்ளம், உள்ளதைக் கொண்டு திருப்தியுறாத மனம், பயன் தராத கல்வி, ஏற்றுக் கொள்ளப் 
படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து 
பாதுகாப்பு வேண்டுகிறேன்’ (நஸாயி).
Advertisement
Advertisement