தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பங்குனி உத்திரம் அரிய வேண்டிய தகவல்கள்

Advertisement

தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனி. தமிழ் நட்சத்திரங்களில் 12வது உத்திரம். பங்குனி, உத்திரம்,பெளர்ணமி இணையும் நாளைதான் பங்குனி உத்திரம் என்று குறிப்பிடுவோம். அன்று மிகவும் விசேஷமான நாள். காரணம், நாம் பூஜிக்கும் கடவுள்களான சிவன்- பார்வதி, முருகன்-தெய்வானை, ராமன் - சீதை அவர்களின் திருமண வைபோகம் நடைபெற்றது. மேலும் லட்சுமி பாற்கடலில் அவதரித்த தினமும் அன்றுதான்.

*மன்மதனை எரித்து உஷ்ணத்தில் இருந்த சிவனை சாந்தப்படுத்த அவரை பார்வதி மணந்தார். மன்மதனுக்கு அளித்த தண்டனையால் பாதிக்கப்பட்ட ரதிக்கு

‘உன் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான்’ என பார்வதி வரம் தந்த நாள்.

*கொள்ளிட ஆற்றங்கரையில் ஸ்ரீ புலீஸ்வரி அம்மனின் ஆலயம் உள்ளது. இங்கு ஒரே சன்னதியில் ஏழு அம்மன்கள் உள்ளனர். அதில் புலீஸ்வரி என்பது வைஷ்ணவி. இங்குள்ள ஸ்தல மரம் வருடத்திற்கு ஒரே நாளான பங்குனி உத்திரம் அன்று மட்டுமே பூக்கும்.

*திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தும்புரு தீர்த்தத்தில் அன்று நீராடுவது மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுபட உதவும் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

*ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் ஓடும் காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்வர். முத்துக்குமார சுவாமி-வள்ளி தெய்வானை தம்பதியினராக உலா வந்து மக்களுக்கு தரிசனம் தரும் நாள். அன்று பக்தர்கள் முருகனுக்கு பஞ்சாமிர்தம் தயாரித்து, அபிஷேகம் செய்வது வழக்கம்.

*ஆன்மீக பக்தர்கள் இந்த நாளை பசுவாகிய ஆன்மா, பதியாகிய சிவனிடம் இணைவதாக கூறுவர்.

*இன்று பலர் நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு பால்-பழம் மட்டும் சாப்பிடுவார்கள். இதனை ‘கல்யாண கந்தரவிரதம்’ என அழைப்பர்.

- ராஜிராதா, பெங்களூரூ.

Advertisement