தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில்

Advertisement

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்:லட்சுமி நரசிம்மர் கோயில், ஜவகல், கர்நாடக மாநிலம். (புகழ்பெற்ற ஹொய்சாளர் ஆலயமான பேலூரிலிருந்து 30 கிமீ.)

காலம்: ஹொய்சாள மன்னர்

வீர சோமேஸ்வரா (பொ.ஆ.1234-1263).

ஹொய்சாளர் சிற்பக் கலையின் நட்சத்திர வடிவ அடித்தளம் கொண்ட ஆலயக் கட்டுமானமும், சிற்பங்களின் நுணுக்க வேலைப்பாடுகளும், காண்போரைக் கவர்ந்திழுக்கும். மென்மையான மாவுக்கல் கொண்டு வடிக்கப்பட்ட சிற்பங் களின் பேரழகு, சிற்ப அமைதி, நுண்ணிய ஆபரணங்கள், சுவரெங்கும் இடைவெளியின்றி நிறைந்திருக்கும் சிற்பங்கள் போன்ற அம்சங்கள் அமைந்த ஹொய்சாளர் களின் ஆலயங்களில் பேலூர், ஹளபேடு, சோமநாதபுரா, பெலவாடி, அம்ருதபுரா, நுக்கெஹள்ளி புகழ்பெற்றவை.

மேற்கண்ட ஆலயங்கள் போல், புகழ் வெளிச்சம் பெறாமல் மறைந்திருக்கும் மாணிக்கம் ‘ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில்’. சிறு கிராமத்துச் சூழ்நிலையில், பிரதான சாலையில் இருந்து சற்றே விலகி, வீடுகள் சூழப்பட்டு, பக்தர்கள் கூட்டம்

அதிகமின்றி, அமைதியுடன் காணப் படும் இவ்வாலயத்திற்கு குறைவான எண்ணிக்கையிலான பக்தர்களும், சிற்பக்கலை ஆர்வலர்களும் வருகின்றனர்.ஆலய வளாகத்தினுள் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களைக் காணுகையில், இவ்வூரில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய ‘ஜவகல் ஸ்ரீநாத்’தின் நினைவு எழுந்தது.

கலை வரலாற்றாசிரியர் ஜெரார்ட் ஃபோகேமா (Gerard Foekema), இந்த கோயிலில் இருக்கும் சுவர் வெளிப்புற புடைப்புச் சிற்பங்கள், அவற்றின் அசர வைக்கும் அற்புத வேலைப்பாடுகள் மற்றைய ஹொய்சாள கோயில்களை விடவும் மேம்பட்டவை என்று தனது ‘A Complete Guide to Hoysala Temples’ நூலில் குறிப்பிட்டுள்ளார். கருடன் தாங்கி நிற்கும் லட்சுமி நாராயணர், நரசிம்மரின் இரணிய வதம், நாட்டிய சரஸ்வதி, மகிஷவதம் புரியும் துர்க்கை, லட்சுமியை மடியில் இருத்தி வீற்றிருக்கும் விஷ்ணு போன்ற சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவை.

 

Advertisement

Related News