தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கைலாயநாதரை வழிபடும் நாகம்!

வேலூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அணைக்கட்டு தாலுக்கா என்னுமிடத்தில் அமைந்துள்ள கோயில் ``அருள்மிகு உமா மகேஸ்வரி உடனுறை கைலாய நாதர்’’ திருக்கோவில். இத்திருத்தலம் கிபி 10ஆம் நூற்றாண்டு, சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும். தற்போது பெங்களுரில் அல்சூர் ஏரிக்கு அருகில் ஜீவசமாதி கொண்டிருக்கும் ஒடுக்கத்தூர் சுவாமிகள் என்று அழைக்கக்கூடிய சித்தர் ஒடுக்கத்தூர் மகான் அவர்கள் தங்கி வழிபாடு செய்த ஆலயம். காலப் போக்கில் ஒடுக்கத்தூர் மகான் சென்றுவிட, வழிபாடு குன்றிய நிலையில் எம்பெருமானே ஆற்றில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி சிதிலமடையச் செய்துள்ளார். இத்தலத்தின் அடியில், பலகோடி சித்தர்கள் தியானத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

மேலும், மகாகுரு அகத்தியரும், சித்தர் காகபுஜண்ட முனியும் இக்கோயிலுக்கு இன்றும் வந்து தங்கி செல்வதாக கூறப் படுகிறது. அதே போல், மாணிக்கவாசகரும் இத்தலத்தில் வந்து தங்கி மனிதர்களைப் போலவே சுற்றிவருகிறார் என்று வரலாறு கூறுகிறது. சித்தர் ராமலிங்க ஸ்வாமிகள் மற்றும் சித்தர் திவ்யமுனி ஆகிய இருவரும் இத்தலத்தின் அடியில் ஜீவசமாதி கொண்டிருக்கிறார்கள். காசிக்கு நிகரான ஸ்தலமான இக்கோயில், காசிக்கு சென்றால் எப்படி பாவங்கள் அனைத்தும் விலகுமோ, அதுபோன்று இத்திருத்தலத்திற்கு வந்து எம்பெருமானை தரிசித்தல், பாவங்கள் விலகும். கோயில் அருகில் ``உத்திர காவிரி’’ என்னும் நதி இருக்கிறது. காசியில் இருக்கும் கங்கை நதியானது, தெற்கு புறமாக கைலாயநாதர் கோயிலை தொட்டு வடக்கு புறமாக செல்கிறது. இது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. இத்தலம், ரம்பைக்கும் ஊர்வசிக்கும் சாபவிமோச்சனமளித்ததாகவும் கூறப்படுகிறது.

கைலாய நாதரை வழிபடும் நாகம்

நாகம் (சர்ப்பம்) ஒன்று தினமும், கைலாய நாதரை தரிசித்து வருகிறது. இந்த நாகம், அவ்வளவு எளிதில் மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை. அப்படி சிலருக்கு காட்சி தரும் நாகம், சிவஹரி என்னும் பக்தருக்கு விஸ்வரூபத்தில் அதாவது, நாகத்தின் வால் தரையில் படும்படியும், தலை வானத்தை நோக்கி படம் எடுத்து காட்சி தந்துள்ளது நாகம். இந்த நாகம் கைலாய நாதருக்கு காவலாக இருப்பதாக கூறப்படுகிறது.

நாகத்தை நேரில் கண்ட பக்தர்

மூன்றாவது பிரதோஷம் அன்று கோயிலின் மதில் சுவரின் மீது நாகம் வந்து கொண்டிருந்தது. அப்போதுதான் முதல் முதலில் நாகத்தை பார்த்தேன். அதன் பிறகு அடிக்கடி என் கண்களில் நாகம் தென்பட ஆரம்பித்தது. இரவு சுமார் 11.30 மணி அளவில், கோயிலின் உள்ளே முழு நீள நான்கரை முதல் ஐந்து அடியில் நாகத்தை கண்டேன். இந்த கோயிலுக்கு நான் வந்த பின்னர் உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும் பல மாற்றங்களை என்னுள் கண்டேன். மேலும், பணம் சேர்த்து வீடு ஒன்றை கட்டினேன். அதில் குடியேற முடியாமல் அவதிப்பட்டேன். கைலாயநாதரை வேண்டிக் கொண்டேன். தடை விலகி குடியேறினேன் என்றார் யோகானந்தம் என்னும் பக்தர்.

சிதிலமடைந்த கைலாய நாதர் திருக்கோயில்

சித்தர் ஒடுக்கத்தூர் மகான் சென்ற பின், இத்தலம் பூஜிக்கப் படாமல் கோயில் சிதிலமடைந்துவிட்டது. அதன் பிறகு மக்கள் இங்கு வர அச்சப்பட்டார்கள். பெரும்பாலான மக்களுக்கு இந்த கோயில், இங்கு இருப்பதே தெரியாமல் போய்விட்டது. தைப் பொங்கலன்று மட்டும் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிப்பட்டு வந்தனர். இந்நிலையில், இவ்வூரில் வசித்துவரும் கலைச் செல்வி என்னும் பக்தையின் கனவில் தோன்றிய கைலாயநாதர், தனக்கு கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். தன் கனவில் தோன்றிய கைலாயநாதர் பற்றியும், கோயில் கட்டும்படி உத்தரவிட்டதையும் கிராம மக்களுக்கு கலைச் செல்வி தெரிவித்தார். இதனையடுத்து, ஊர்மக்களோடு இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டார் கலைச் செல்வி. 15 ஆண்டு காலமாக கைலாயநாதரை பராமரித்தனர். ஊர் மக்களால், கோயிலின் கருவறை, விமானம் ஆகியவை அமைக்கப்பட்டது.இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற இந்த புண்ணிய திருத்தலத்தின் திருப்பணி கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இத்தலத்திற்கு கைங்கர்யம் செய்ய விரும்புவோர் தொடர்புக்கு:8695875868.

Advertisement