தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மகாதேவனின் பிரசாதங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மகாசிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டு பார்வதி தேவியும், தேவர்களும் வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அது போல் நாமும் சிவபெருமானை முழு சரணாகதியுடன், உண்மையான பக்தியுடன் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் மிக முக்கியமானது மகாசிவராத்திரி விரதம்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மகாசிவராத்திரியாகும். நாடு முழுவதும் சிவ பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் மகாசிவராத்திரி விழாவும் ஒன்று. இந்துக்களின் மிக முக்கியமான விரத நாள். முப்பெரும் தேவர்களில் ஒருவரான சிவபெருமானுக்குரிய ராத்திரியாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. சிவன் கோயில்களில் வழங்கப்படும் வித்தியாசமான பிரசாதங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

*கங்கை கொண்ட சோழபுரத்தில் கோரைப்புல் கிழங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் புற்று மண் உருண்டை பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருக்குற்றாலத்தில் குற்றாலநாதர், அம்பாள் இருவருக்கும் சுக்கு காபி நைவேத்யம் செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*ஆவுடையார் கோவில் சிவனுக்கு பாகற்காய் படைக்கப்படுகிறது.

*பட்டுக்கோட்டை அருகிலுள்ள பிரக்காலக்கோட்டை சிவன் கோயிலில் ஆல இலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்டதாகும்.

*காளஹஸ்தியில் பச்சைக் கற்பூரத்தை பன்னீரில் கலந்து, சங்கின் மூலம் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

*கோவை துடியலூர் விருந்தீஸ்வரர் சிவன் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக உள்ளார். இங்கு முருங்கை இலைதான் பிரசாதம்.

*திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு பாகற்காயும், தூதுவளைக் கீரையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*திருச்சி திருவாளைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மாங்காய் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

சிவனின் அபிஷேகங்கள்

*சிவனும், பார்வதியும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் வேதாரண்யம் கோயிலில் ஆண்டுக்கொரு முறை அபிேஷகமும், சந்தனக் காப்பும் செய்கின்றனர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாத சுவாமிக்கு தினமும் நெய் அபிஷேகம் மட்டும் செய்யப்படுகிறது.

*குற்றாலம் குற்றால நாதருக்கு மூலிகைகள், வேர்கள், மருந்துச் சரக்குகள் சேர்த்து அரைத்துக் காய்ச்சும் தைலத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

*திருவாரூர் மாவட்டம் பொன்னிறை தலத்தில் எழுந்தருளியுள்ள அகஸ்தீஸ்வரருக்கு நெல்லிக்காய் பொடி அபிஷேகம் செய்யப்படுகிறது.

- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

Related News