தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி தாயுமானவர்

* ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசரன், இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் சிராப்பள்ளி என அழைக்கப்பட்டது; பின்னர் மருவி திருச்சிராப்பள்ளி என்றாயிற்று. சுருக்கமாக திருச்சி.
Advertisement

* ரத்னாவதி எனும் பெண்ணிற்கு, அவளுடைய தாய் உருவில் இத்தல ஈசன் வந்து பிரசவம் பார்த்ததால் தாயுமானவர் எனஅழைக்கப்பட்டார்.

* மாணிக்கவிநாயகர் சந்நதி உள்ளிட்ட முதல் நிலை; மட்டுவார் குழலியம்மை சமேத தாயுமானவர் திருக்கோயில் இரண்டாம் நிலை; குடைவரைக் கோயில் உச்சிப்பிள்ளையார் கோயில் மூன்றாம் நிலை என்று அமைந்துள்ளது மலைக்கோயில்.

* உச்சிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து கீழே பார்த்தால் படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும் விநாயகரின் துதிக்கை போல தோன்றும்.

* தாயுமானவர் கோயில் குடமுழுக்குக்காக பொருளுதவி செய்தவரில் ஒருவர் பெயர் கல்வெட்டில் பிச்சைக்காரன் என பொறிக்கப்பட்டுள்ளது.

* சித்திரைப் பெருந்திருவிழாவின் 5ம் நாள் செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுகப்பிரசவம் நிகழ, சுக்கு வெல்லம் கலந்த மருந்துப்பொடி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். அதனால் பயனடைந்தோர் அநேகம்.

* பதினாறு கால் மண்டபத்திற்கு மேல் உள்ள மணி மண்டபத்தில்இரண்டரை டன் எடை, 4 அடி 8 அங்குல குறுக்களவும் கொண்ட மணியைக் காணலாம். இது கிரிக்டன் எனும் ஆங்கிலேயர் அளித்தது.

* மலைப்பாதையின் நடுவில் ‘சிவ சிவ ஒலி மண்டப’த்தில் தினமும் காலை, மாலை இரு வேளையும் ஒலிபெருக்கியில் திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது.

* மட்டு எனில் தேன் எனப்பொருள். தேன் நிறைந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவள் எனும் பொருள்படி இத்தல அம்பிகை மட்டுவார் குழலம்மை என அழைக்கப்படுகிறாள்.

* சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான திருவையாறு தியாகராஜர் இந்த மட்டுவார் குழலம்மை மீது பாடல்கள் புனைந்துள்ளார்.

* அம்மன் சந்நதியின் முன் உள்ள மண்டபத்தில் சக்ரம் வரையப்பட்டுள்ளதால் அம்மனை சக்ரநாயகி என்றும் அழைப்பர்.

* அம்மன் சந்நதி எதிரில் உள்ள பாதாள அறையில் பாதாள ஐயனார் அருள் புரிகிறார். விவசாயம் செழிக்க அருள்பவராம் இவர்.

* தமிழ்நாட்டிலுள்ள நான்கு பெரிய லிங்கங்களில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்று.

* தாயுமானவருக்கு அருகில் நாக கன்னியர் எட்டுபேர் அருள்கின்றனர்.

* இத்தல தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் நால்வர் தவிர, கூட இரு முனிவர்களுடன் தரிசனம் அளிக்கிறார்.

* ஆலயத்தில் காணப்படும் கல்லால் உருவாக்கப்பட்ட சங்கிலி, கல் சிங்கத்தின் வாய்க்குள் சுழலும் கல்பந்து போன்றவை சிற்பக்கலை சிறப்புக்குசான்றுகள்.

* இத்தலத்தில் அருளும் திருமகளை 108 செந்தாமரை மலர்களால் அர்ச்சிப்பவர்களின் கடன்கள் விரைவில் தீரும் என நம்பிக்கை.

* பௌர்ணமி நாட்களில் திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலமும் நடக்கிறது.

* சுகப் பிரசவத்துக்கு நேர்ந்து கொண்டவர்கள் தரும் வாழைப் பழத்தாரை அர்ச்சகர், பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்.

* ஐப்பசி பௌர்ணமியில் தாயுமானவருக்கு அன்னாபிஷேகம் நடக்கும்.

Advertisement

Related News