தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அழகிய அறுங்கோண மண்டபம்

சிற்பமும் சிறப்பும்

Advertisement

காலம்: இன்று நாம் காணும் வடிவிலுள்ள கோவில்களும், ஏராளமான மண்டபங்களும் 14-15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டவை.

அமைவிடம்: கோட்டை - கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குளங்கள் மற்றும் ஏரிகள் பண்டைய பாரதத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மையின் ஒருங்கிணைந்த அமைப்பாகும். மேலும் ஒவ்வொரு நகர அமைப்பிலும் கோயில் மற்றும் குளங்கள் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு பெற்றிருந்தது.ஒவ்வொரு ஊர் மக்களின் மத வழிபாடு, அழகியல் மற்றும் நீர் பயன்பாடு போன்ற அம்சங்களைத் தவிர, நீர் சேகரிப்பில் குளங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து நிலத்தடி நீரூட்டலுக்கான முக்கிய காரணிகளாக அமைகின்றன.

இந்தியாவில் உள்ள பல பழங்கால நகரங்கள், கோயில்கள் மற்றும் குளங்களுக்குப் புகழ் பெற்றவை. திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேலக்கோட்டையில் (கன்னடத்தில் ‘மேலுகோட்’) உள்ள குளம் அவற்றில் மிகச்சிறந்த ஒன்றாகும்.‘கல்யாணி’ என்றழைக்கப்படும் இவ்வழகிய குளம் நான்கு புறமும் படிகளுடன் கூடிய நீண்ட நடைபாதைகள் கொண்டு பெரும் விஸ்தீரணத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

குளக்கரையைச் சுற்றிலும் சிறு மண்டபங்கள் உள்ளன. அறுங்கோண வடிவத்தில் அமைந்த ‘புவனேஸ்வரி மண்டபம்’ ராமாயணம் மற்றும் தசாவதாரக்காட்சி புடைப்புச் சிற்பங்களுடன் அனைவரையும் ஈர்க்கிறது.இந்த அழகிய அறுங்கோண மண்டபம் ரஜினி காந்த்தின் பிரபலமான திரைப்படங்களான ராஜாதி ராஜா, தளபதி, முத்து மற்றும் படையப்பா உட்பட பல தென்னிந்தியப் படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அருகில் உள்ள செலுவநாராயணசுவாமி கோயிலும், மலை உச்சியில் உள்ள யோக நரசிம்ம கோயிலும் மேலக்கோட்டையில் எப்போதும் தவறவிடாத வழிபாட்டுத் தலங்களாகும். வைஷ்ணவத்தின் முதல் ஆச்சார்யாரான ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் 12 ஆம் நூற்றாண்டில் 14 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார். இதனால் மேலக்கோட்டை ஸ்ரீவைஷ்ணவ பிரிவினரின் முக்கிய புனிதத் தலமாக விளங்குகிறது.மேலக்கோட்டைக்கும் தமிழகத்தும் மற்றொரு முக்கிய தொடர்புமுண்டு. இவ்வூர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த ஊராகும்.

மது ஜெகதீஷ்

Advertisement