தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவளிவணல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில்

கிரகங்களே தெய்வங்களாக

Advertisement

கிரகங்களே தெய்வங்களாகவும் அதற்கு பெயர்கள் நாமகரணம் தந்து கிரகங்களுக்கான பரிகாரங்களையும் தெய்வங்களே அருகில் அருள்புரிகின்றன. இவ்வாறு, ஒவ்வொரு திருத்தலங்களும் இவ்வாறு பல விஷயங்களை அருள்புரிகின்றன. என்பதே சிறப்பான விஷயமாக உள்ளன.

பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த இறைவனை பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இருவரும் பார்ப்பதற்கு ஒன்றாகவே இருப்பர். இதில் மூத்த பெண் சுசீலையை அரசப்புலவரின் மகன் மணந்தான். இவன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களை தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தபோது சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இல்லாமல் உருக்குலைந்து காணப்பட்டாள்.

இவளது தங்கை அழகுடன் இருந்ததால் அவளை மனைவியாக நினைத்து அழைத்தார். அருகிலிருந்த சுசீலையை தன் மனைவியாக ஏற்க மறுத்தார். இதனால் மனம் வருந்திய சிவாச்சாரியார் இத்தல இறைவனிடம் அழுது முறையிட்டார். இறைவன் சுசீலையை கோயில் எதிரிலுள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். நீராடி வெளியே வந்தவுடன் சுசீலை முன்பை விட மிக அழகாக விளங்கினாள். சிவன், பார்வதி சமேதராக காட்சி தந்து அவள்தான் இவள் என சுட்டிக்காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர் எனவும் இறைவன் சாட்சிநாதர் எனவும் ஆனார்கள்.

இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், குரு, சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.

*அனுஷம் நட்சத்திர நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தீராத சருமப் பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.

*பரணி நட்சத்திரம் அல்லது பூராடம் நட்சத்திர நாளில் சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி தினையை நைவேத்தியம் கொடுத்தால் எப்பேர்பட்ட கண் பிரச்னைகளும் ஒரு கண் பார்வை பிரச்னையாக இருந்தாலும் விரைவாக குணமடையும்.

*புனர்பூசம் நட்சத்திர நாளில் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு மாமரத்தில் செய்யப்பட்ட சிறிய தொட்டில் செய்து வெண்பட்டு அல்லது மஞ்சள் பட்டுநூலால் இம்மரத்தில் கட்டி பின்பு பார்லி அரிசியில் சுவாமிக்கு நைவேத்தியம் தொடர்ந்து மூன்று மாதம் செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.

*கர்ப்பிணி பெண்களும் சுவாமிக்கு பார்லி அரிசி நைவேத்தியம் பிரசாதத்தை சாப்பிட்டுவந்தால் சுகப்பிரசவம் உண்டாகி நல்ல படியாக குழந்தை பிறக்கும்.

*இத்திருத்தலத்தில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் கணவன் - மனைவி பிரச்னை தீரும். கணவன் - மனைவி ஒன்றுபட்டு வாழ்வர்.

*பௌர்ணமி நாளில் மஹா வில்வச் செடியை இக்கோயிலில் நட்டு அதனைப் பாதுகாப்பாக வளர்த்தால் வில்வம் வளர வளர உங்களின் கர்மா குறைந்து வாழ்வில் சுபகாரியங்கள் உண்டாகும்.

எப்படிச் செல்வது? தஞ்சாவூரிலிருந்து (26 கி.மீ) திருவாரூர் செல்லும் வழியில் அம்மாபேட்டையில் இறங்கி வடக்கே 6 கி.மீ தூரத்தில் அவளிவணல்லூர் உள்ளது.

Advertisement

Related News