தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெகன்மோகன் வெற்றி பெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மர்ம சாவு: கொலையா? போலீஸ் விசாரணை

திருமலை: ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பலர் பந்தயம் கட்டினர். ஆனால் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியை நம்பி பணம் கட்டியவர்கள் ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.
Advertisement

இந்நிலையில் ஏலுரு மாவட்டம் தூர்பு திகவல்லி கிராமத்தை சேர்ந்த 7வது வார்டு கவுன்சிலரான வேணுகோபால்(52) என்பவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று சுமார் ரூ.30 கோடி வரை பந்தயம் கட்டியுள்ளார். இதற்கு கடன் வாங்கினார். ஆனால் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் வேணுகோபாலுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இவரிடம் பணத்தை கட்டியவர்கள், கடனாக ெகாடுத்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் கடந்த 7ம்தேதி வேணுகோபால் வீட்டுக்குள் புகுந்து ஏசி, சோபாக்கள், படுக்கைகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச்சென்றனர். இதையறிந்த வேணுகோபால் கடும் வேதனை அடைந்தார். நேற்றுமுன்தினம் அவர் வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் பின்புறமுள்ள பண்ணைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்துள்ளார். அவரது தலையில் ரத்தக்காயங்கள் இருந்தது. எனவே அவரை யாரோ அடித்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement

Related News