தமிழக அரசு திட்டங்களுக்கு ஆதரவு பெருகுவதை பொறுக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது அதிமுக: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக அரசு திட்டங்களுக்கு ஆதரவு பெருகுவதை பொறுக்காமல் அதிமுக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் கடந்தாண்டு 5 லட்சம் பேர் பயன்பெற்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ...

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் காலமானார்..!!

By Lavanya
12 minutes ago

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சத்யபால் மாலிக். இவர் பாரதிய கிராந்தி தள், ஜனதா தள், இந்திய தேசிய காங்கிரஸ், லோக் தள், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றில் இணைந்து மக்கள் பணியாற்றி யிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபோது...

கொளத்தூர் பயணத்தால் நெடுநாள் பிரிந்திருந்த உணர்வை நீங்கி, புது வலிமையைப் பெற்றேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

By Nithya
14 minutes ago

சென்னை: உடல்நிலை காரணமாக தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியதாவது; உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று! இன்றைய கொளத்தூர் பயணத்தில்,...

செயற்கை நுண்ணறிவு(AI) பயன்பாட்டால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவு - ஆய்வில் தகவல்

By Porselvi
14 minutes ago

வாஷிங்டன் : செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான massachusetts institute of technology செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனர்களின் மூளையை ஆராய்ந்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு...

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார்

By MuthuKumar
37 minutes ago

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மே 11 முதல் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ...

தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை கடந்ட ஆண்டை விட 21% அதிகரிப்பு

By MuthuKumar
an hour ago

சென்னை: தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை கடந்ட ஆண்டை விட 21% அதிகரித்துள்ளது. தாய், குட்டிகள் இரண்டையும் காணும் வகையில் கணக்கெடுப்பு ஏப்ரலில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் தெரிவித்துள்ளது. ...

புதுவலிமையை பெற்றேன் இன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By MuthuKumar
an hour ago

சென்னை: உடல்நிலை காரணமாக தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, இன்று புது வலிமையைப் பெற்றேன். நலம் விசாரித்து அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். ...

ரூ.28 கோடியில் கிளாம்பாக்கம் காவல் நிலையம், பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

By Nithya
an hour ago

சென்னை: ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையம், பெரம்பூர்-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 18.26 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள...

தமிழக அரசின் தொழில்முனைவோருக்கான ChatGPT” ஒரு நாள் பயிற்சி வகுப்பு..!!

By Lavanya
an hour ago

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு "தொழில்முனைவோருக்கான ChatGPT" பயிற்சி வரும் 09.08.2025 தேதி நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032. தொழில்முனைவோர். சிறு மற்றும் நடுத்தர வணிக...

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: ஒன்றிய அரசு பாராட்டு

By Gowthami Selvakumar
an hour ago

சென்னை: உடல் உறுப்பு தானம் பெறுவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் உடலுக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் அரசு மரியாதை உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை திட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒன்றிய அரசு புகழாரம் சூட்டியிருக்கிறது....