தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த போலி மதுபான தயாரிப்பு வழக்கில் ஆந்திரா முன்னாள் அமைச்சர் கைது

திருமலை: ஆந்திர மாநிலத்தில் சில மாதங்களாக போலி மதுபான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் போலி மதுபான தொழிற்சாலை உரிமையாளரும் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் ஆதரவாளருமான ஜனார்தன்ராவ் கைது செய்யப்பட்டார்.

Advertisement

அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் மேற்பார்வையில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டதாகவும், ஆந்திராவில் ஆட்சி மாறியபிறகு போலி மதுபான உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும், அதன்படி இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஜோகி ரமேஷ் மீண்டும் தன்னை போலி மதுபானம் தயாரிக்கும்படி கூறியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் இப்ராஹிம்பட்டணத்தில் உள்ள ஜோகி ரமேஷின் வீட்டிற்கு சிறப்பு புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மற்றும் கலால் அதிகாரிகள் நேற்று காலை சென்று அவரை கைது செய்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் திரண்டு போலீசார் மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவரை விஜயவாடாவில் உள்ள கலால் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தவர்

போலி மதுபான வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ், கடந்த வாரம் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது, கற்பூரம் ஏற்றி வைத்து போலி மதுபான வழக்கிற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு எதிராக சதி நடக்கிறது எனக்கூறி சத்தியம் செய்தார். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement