தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது

தென்காசி: சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்துக்களை பதிவிட்ட யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அம்பை. ரோடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் திலீபன் (35). பட்டதாரியான இவர் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களில், பெண்கள் குறித்து இழிவான கருத்துக்கள் அடங்கிய வீடியோக்களை பதிவேற்றி வந்ததாகவும், மேலும் அவர் பெண் சிசுக்கொலையை ஆதரித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் திலீபனின் வீடியோவை பகிர்ந்து, தென்காசி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Advertisement

இந்நிலையில், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சமூக ஊடகங்களில் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ‘உளறி கொட்டவா’ என்ற பெயரில் இயங்கி வந்த இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகளில், தொடர்ந்து பெண்கள் குறித்து இழிவாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் வீடியோக்கள் வெளியாகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், அந்தக் கணக்கை இயக்கி வந்தது திலீபன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து யூடியூபர் திலீபன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இதன் அடிப்படையில் திலீபனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

Related News