தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விபத்தில் உயிரிழந்து உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் வாலிபர் இறுதிச்சடங்கு

ஆர்.கே.பேட்டை: சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை தாலுகா ராஜாநகரம், மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன்(20). இவர் கடந்த 11ம் தேதி தனது நண்பர் முருகன்(20) என்பவரை அழைத்துக்கொண்டு, முருக்கம்பட்டு கிராமத்தில் இருந்து திருத்தணி நோக்கி பைக்கில் சென்றார். அப்போது, எதிரே வந்த பைக் புருஷோத்தமனின் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த புருஷோத்தமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, இறந்த புருஷோத்தமனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்வந்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் புருஷோத்தமனின் கண், இதயம் மற்றும் இதய வால்வுகள், நுரையீரல், கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தானமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று புருஷோத்தமனின் உடல் ராஜாநகரம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்த புருஷோத்தமனின் உடலுக்கு, திருத்தணி ஆர்டிஓ கனிமொழி, தாசில்தார் உதயம் ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, புருஷோத்தமனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related News