தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளைஞர்கள், ராணுவம் இணைந்து போராட்டம் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி வெளிநாடு தப்பியோட்டம்: நாடாளுமன்றத்தை கலைத்து அதிரடி

அண்டனானரிவோ: ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அண்டனானரிவோவில், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி முதல் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டைக் கண்டித்து இளம் தலைமுறையினரால் போராட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்த போராட்டங்கள் சில நாட்களிலேயே நாடு தழுவிய அளவில் விரிவடைந்து, ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

Advertisement

இந்த சூழலில், கடந்த 2009ஆம் ஆண்டு ரஜோலினா ஆட்சிக்கு வர உதவிய ‘கேப்சாட்’ என்றழைக்கப்படும் நாட்டின் உயரடுக்கு ராணுவப் பிரிவு, கடந்த 11ம் தேதி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தது. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் ஆதரவை இழந்த நிலையில், அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா பிரான்ஸ் நாட்டு ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் வாயிலாக உரையாற்றிய ரஜோலினா, ‘நான் பதவி விலகவில்லை; பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளேன்’ என்று அந்த உரையில் குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்ற கீழ் அவையை கலைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

* ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா வெளிநாடு தப்பி ஓடிவிட்டதாலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாலும் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. இதை தேசிய வானொலியில் ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில்,’நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டோம். அனைத்து அரசு நிறுவனங்களையும் ராணுவம் கலைத்து வருகிறது’ என்றார்.

Advertisement